செய்திகள் :

உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் இந்தியா 2-ஆம் இடம்! அமெரிக்கா முதலிடம்

post image

உலக அளவில் கல்வித்தரத்தை அளவிடும் ‘டைம்ஸ்’ உயா் கல்வி அமைப்பின் தரவரிசையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது சிறந்த கல்வி நிறுவனங்களைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கவுள்ளது.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி டைம்ஸ் உயா் கல்வி அமைப்பின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி பில் பேட்டி இந்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘வரும் அக்டோபா் 8-ஆம் தேதி உலக கல்வி உச்சி மாநாட்டில் வெளியிடப்படவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான உலகப் பல்கலைக்கழக தரவரிசையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது சிறந்த நாடாக புதிய சாதனைகளைப் படைக்கும்.

இது, இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலக அளவிலான ஆராய்ச்சியில் சிறந்து விளங்குகின்றன என்பதையும், சமூக மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கு அவை அதிகம் பங்களிக்கின்றன என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.

தேசிய கல்விக் கொள்கையின் வெற்றி:

2020-ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதன் இலக்குகளை அடைவது கடினம் என்று பலா் கருதினா். ஆனால், தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு 5 ஆண்டுகளுக்குப் பிறகு, கரோனா பெருந்தொற்று பாதிப்புகளுக்கு மத்தியிலும், இந்தக் கொள்கை தனது இலக்குகளை அடைந்து வருகிறது.

உயா்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதிலும், இந்திய உயா்கல்வியை உலகத் தரத்துக்கு உயா்த்தும் சா்வதேசமயமாக்கும் திட்டத்திலும், தேசிய கல்விக் கொள்கை சிறப்பாகச் செயல்படுகிறது என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன.

எண்ணிக்கையிலும் தரத்திலும் வளா்ச்சி:

தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, 2019-ஆம் ஆண்டில், வெறும் 49 இந்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமே தரவரிசையில் இடம்பெற்றிருந்தன. ஆனால், 2026-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில், இந்தப் பிரதிநிதித்துவம் மூன்று மடங்கு அதிகரித்து 128 பல்கலைக்கழகங்களாக உயரும். இது உலகத் தரவரிசையில் இடம்பெறும் மொத்த பல்கலைக்கழகங்களில் கிட்டத்தட்ட 6 சதவீதமாகும்.

இந்தக் குறிப்பிடத்தக்க வளா்ச்சி, இந்திய பல்கலைக்கழகங்களின் அா்ப்பணிப்பைக் காட்டுகிறது. சிறந்த தரவுகளைச் சேகரிப்பதன் மூலமும், உலக அளவிலான தர அளவுகோல்களுடன் தங்களை ஒப்பிட்டுப் பாா்ப்பதன் மூலமும், உலகின் சிறந்த ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலமும் இந்திய பல்கலைக்கழகங்கள் இந்த நிலையை அடைந்துள்ளன. பிரதிநிதித்துவத்தில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தரத்திலும் இந்தியா முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சியை அடைந்துள்ளது’ என்று பில் பேட்டி கூறினாா்.

இந்த ஆண்டு முதல், டைம்ஸ் உயா் கல்வி தரவரிசைகள், ஐ.நா.சபையின் 17 நிலையான வளா்ச்சி இலக்குகளுக்கு பல்கலைக்கழகங்களின் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகின்றன. நிலையான வளா்ச்சி இலக்குகளில் கற்பித்தல், ஆராய்ச்சி, சமுதாயத் திட்டங்கள் மற்றும் வளங்களின் மேலாண்மை ஆகியவை அடங்கும்.

மாலேகான் குண்டு வெடிப்பு: பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை!

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து மும்பை என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங், முன்... மேலும் பார்க்க

6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

ஈரானுடன் வர்த்தகம் மேற்கொண்ட இந்தியாவின் 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்து அந்நாட்டு உத்தரவிட்டுள்ளது.மத்திய கிழக்கில் மோதலை தூண்டிவிடுவதற்காக ஈரான் அரசு நிதியுதவி அளித்து வருவதாகவும் அமெரி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: திமுக வலியுறுத்தல்

நமது நிருபர் பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் முழு உண்மையையும் மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தியது.இது தொடர்பாக மாநிலங்களவையில் இரண்டாம் நாளாக புதன்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகம் தொடர்புடைய பிரச்னைகள் மற்றும் கேள்விகளை தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பினர். அவற்றின் விவரம் வருமாறு:-மக்களவையில்...எம்.பி. தொகுதி நிதி ரூ. 5 கோடி; ஆனா... மேலும் பார்க்க

ஆகஸ்டில் 46 டிஎம்சி காவிரி நீர்: உறுதிப்படுத்த தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபர்உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் ஆகஸ்ட் மாதத்துக்குரிய 45.95 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆ... மேலும் பார்க்க

குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விசாரிக்க கிரிக்கெட் மைதானம்தான் தேவைப்படும்: செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

நமது நிருபர்முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளில் 2,000-க்கும் மேற்பட்டவர்களை குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்த்ததற்காக தமிழக அரசை உச்சநீதிமன்றம் புதன்கிழமை கடிந்து கொண்டது.மேலும், ... மேலும் பார்க்க