செய்திகள் :

உலகளவில் 56 மனித சிறுநீரகங்களை விற்ற உக்ரேனிய பெண் போலந்தில் கைது!

post image

சட்டவிரோதமாக 56 மனித சிறுநீரகங்களைப் பெற்று அதனை விற்பனை செய்து கசகஸ்தானில் சிறைத் தண்டனை பெற்ற உக்ரேனிய பெண் போலந்து நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் மனித உறுப்புகளைக் கடத்தும் கும்பலுடன் தொடர்புடையவர் உக்ரேன் நாட்டைச் சேர்ந்த க்செனியா பி. என்று குறிப்பிடப்படும் 35 வயதான பெண். இவர், கடந்த 2017 முதல் 2019 வரையிலான காலத்தில் சட்டவிரோதமான முறையில் 56 மனித சிறுநீரகங்களைப் பெற்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததற்காக அவருக்கு கசகஸ்தான் நாட்டில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, தலைமறைவான அவரை கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இண்டர்போல் அமைப்பு தேடி வந்த நிலையில் அவரை பிடிக்க சிவப்பு அறிவிப்பு வெளியிட்டு சர்வதேச நாடுகளின் உதவியை நாடியிருந்தது.

இதையும் படிக்க:அதீத உணவு சாப்பிடும் விடியோக்கள் மூலம் பிரபலமானவர் உடல் பருமனால் மரணம்!

இந்நிலையில், உக்ரைன் நாட்டுடனான எல்லையில் போலந்து நாட்டு பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று (மார்ச்.11) தெரிவித்துள்ளனர். ஆனால், கசகஸ்தான் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டிய அவர் போலந்து நாட்டில் இருந்து கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்த தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

மேலும், போலாந்து அதிகாரிகள் அவரை ஒருவார காலம் காவலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளதாகவும் அதன் பின்னர் அவர் கசகஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, அவர் கசகஸ்தான், அர்மேனியா, அஜர்பைஜான், உக்ரைன், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் தாய்லாந்து போன்ற நாட்டு மக்களின் பணத்தேவையை அறிந்து அவர்களிடமிருந்து சட்டவிரோதமான முறையில் சிறுநீரகத்தை பெற்று அதனை கள்ளச்சந்தையில் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக குடியேறிய 2 குழந்தைகள் உள்பட 11 வங்கதேசத்தினர் கைது!

புது தில்லியின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக குடியேறிய 2 குழந்தைகள் உள்பட 11 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறுபவர்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் போதைப் பொர... மேலும் பார்க்க

ஔரங்கசீப் கல்லறை அழிக்கப்பட வேண்டும்: சிவசேனை எம்.பி.

மகாராஷ்டிரத்திலுள்ள முகலாய பேரரசர் ஔவுரங்கசீப்பின் கல்லறை அழிக்கப்பட வேண்டும் என சிவசேனை எம்.பி. மக்களவையில் பேசியுள்ளார். மக்களவையில் இன்று (மார்ச் 12) பூஜ்ஜிய நேரத்தின் போது பேசிய சிவசேனை கட்சியின் ... மேலும் பார்க்க

சட்டவிரோத சூரிய ஒளி மின்சார வேலியினால் காட்டு யானை பலி!

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திலுள்ள தனியார் தோட்டத்தில் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளது. அதிமங்கலா பகுதியிலுள்ள தனியார் எஸ்டேட் தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த... மேலும் பார்க்க

படைகளைச் சந்திக்க எஸ்தோனியா செல்கிறார் இளவரசர் வில்லியம்!

உக்ரைனுக்கு ஆதரவாக எஸ்தோனியா நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள பிரிட்டன் நாட்டு படைகளைச் சந்திக்க முதல்முறையாக அந்நாட்டுக்கு முடி இளவரசர் வில்லியம் பயணம் மேற்கொள்கிறார். ரஷியாவுடனான போரில் உக்ரைன் நாட்டுக்கு... மேலும் பார்க்க

முதல்வர் குறித்து அவதூறு விடியோ! 2 பெண் பத்திரிக்கையாளர்கள் கைது!

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குறித்து அவதூறு பரப்பிய செய்தி தொலைக்காட்சியைச் சேர்ந்த 2 பெண் பத்திரிக்கையாளர்களை ஹைதரபாத் சைபர் குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அம்மாநிலத்தின் பல்... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது! - அன்புமணி ராமதாஸ்

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மும்மொழிக் கொள்கையை... மேலும் பார்க்க