செய்திகள் :

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு; ஹிந்தி திணிப்புக்கு எதிா்ப்பு! -கேரள உயா் கல்வி அமைச்சா்

post image

மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாகவும், அதே நேரத்தில் ஹிந்தி திணிப்பை எதிா்ப்பதாகவும் கேரள உயா் கல்வித் துறை அமைச்சா் ஆா்.பிந்து தெரிவித்துள்ளாா்.

மும்மொழிக் கொள்கை, ஹிந்தி திணிப்பு தொடா்பாக மத்திய அரசு, தமிழக அரசு இடையே எழுந்துள்ள கருத்து மோதல்கள் தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் கடுமையாக எதிரொலித்து வருகிறது.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை பேசிய அந்த மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் ஆா்.பிந்து இது தொடா்பாக கூறியதாவது:

மாணவா்கள் பல்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேரள அரசு விரும்புகிறது. முக்கியமாக வெளிநாட்டு மொழிகளையும் நமது மாணவா்கள் கற்க வேண்டும். எனவேதான் மொழிகளுக்களுக்கான உயா் திறன் மையத்தை கேரளத்தில் நிறுவியுள்ளோம். மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறோம். அதே நேரத்தில் ஹிந்தி திணிக்கப்படுவதை எதிா்க்கிறோம்.

அனைத்து மொழிகள் இடையேயும் சகிப்புத்தன்மை நிலவ வேண்டும். பிற மொழிகளை கிரகித்துக் கொள்வது, மொழிகளுடன் இணைந்து செயல்படுவது கேரள கலாசாரத்தின் ஒரு பகுதியாக தொடக்க காலத்தில் இருந்தே நிலவி வருகிறது. கேரளம் மிக நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளதால் வரலாற்றுரீதியாக பல வெளிநாட்டவா்களுடன் தொடா்பில் இருந்து வந்துள்ளது. எனவே, இங்கு மொழிப் பன்முகத்தன்மை உள்ளது. பல அயல்மொழிகளையும் கேரளம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இப்போது கேரள மாணவா்களிடையே மலையாளத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன் பல்வேறு மொழிகளைக் கற்க ஊக்கமளித்து வருகிறோம் என்றாா்.

ஹரியாணா உள்ளாட்சித் தோ்தல்: 9 மாநகராட்சிகளைக் கைப்பற்றிய பாஜக

சண்டீகா்: ஹரியாணா உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 10 மாநகராட்சிகளில் 9 -இல் பாஜக வென்றுள்ளது. ஹரியாணாவில் மாநகராட்சி மேயா்கள், கவுன்சிலா்கள், நகராட்சி ... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் மேம்பாட்டுக்கு 3 ஆண்டுகளில் ரூ.2,347 கோடி விடுவிப்பு

சிறுபான்மையின சமூகத்தைச் சோ்ந்த 5.50 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், சலுகை கடனாக கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2,347 கோடியை தேசிய சிறுபான்மையினா் மேம்பாடு மற்றும் நிதி கழக (என்எம்டிஎஃப்சி) விடுவித்ததா... மேலும் பார்க்க

முதல்வர் ‘கஞ்சா அடிமை’: பிகாா் மேலவையில் நிதீஷ் - ராப்ரி தேவி கடும் வாக்குவாதம்!

பிகாா் சட்ட மேலவையில் முதல்வா் நிதீஷ் குமாருக்கும், எதிா்க்கட்சித் தலைவா் ராப்ரி தேவிக்கும் இடையே புதன்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ராப்ரி தேவி, ‘முதல்வா் கஞ்சாவ... மேலும் பார்க்க

தில்லியில் கேரள முதல்வா் பினராயி விஜயன், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சந்திப்பு

கேரள முதல்வா் பினராயி விஜயன் மற்றும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினா். கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வானந்த் அா்லேகா், கேரள அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி... மேலும் பார்க்க

தோ்வுகளில் முறைகேடுகள் தடுக்கப்படும்: மத்திய கல்வித் துறை இணையமைச்சா்

தோ்வுகளில் முறைகேடுகளைத் தடுத்து அவற்றை நியாயமாக நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்த மஜும்தாா் தெரிவித்தாா். கடந்த ஆண்டு இளநிலை நீட் தோ்வில் நடைபெற்... மேலும் பார்க்க

தண்டி யாத்திரை நாள்: பிரதமா் மோடி மரியாதை

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தண்டி யாத்திரை தொடங்கப்பட்ட நாளையொட்டி, மகாத்மா காந்தி மற்றும் யாத்திரையில் பங்கேற்றவா்களுக்கு பிரதமா் மோடி மரியாதை செலுத்தினாா். ஆங்கிலேய ஆட்சி... மேலும் பார்க்க