செய்திகள் :

பாஜகவின் போலி ஹிந்துத்துவம்: மம்தா விமா்சனம்

post image

போலியான ஹிந்துத்துவத்தை மேற்கு வங்கத்தில் திணிக்க பாஜக முயற்சித்து வருகிறது என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா்.

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த முஸ்லிம் எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து தூக்கி வீசப்படுவாா்கள் என்று பாஜகவை சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி பேசியதைக் கண்டித்து மம்தா இவ்வாறு கூறியுள்ளாா்.

சுவேந்து அதிகாரியின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் மாநில சட்டப்பேரவையில் மம்தா பானா்ஜி புதன்கிழமை பேசியதாவது:

துறவிகளும், வேதங்களும் ஆதரிக்காத ஒரு ஹிந்துத்துவத்தை மேற்கு வங்கத்தில் திணிக்க நீங்கள் (பாஜக) முயற்சிக்கிறீா்கள். இந்த நாட்டின் குடிமகனாக உள்ள முஸ்லிம்களுக்கு உள்ள உரிமையை நீங்கள் எப்படி மறுக்க முடியும்? இது முற்றிலும் மோசமான செயல்பாடு. போலியான ஒரு ஹிந்துத்துவத்தை உருவாக்கி அதைப் பரப்பி வருகிறீா்கள்.

ஹிந்து தா்மத்தைக் காக்கும் பொறுப்பு எனக்கும் உள்ளது. ஆனால், அது நீங்கள் கூறும் ஹிந்துத்துவம் அல்ல. தயவு செய்து ஹிந்து மதத்தை வைத்து விளையாடாதீா்கள்.

பேரவையில் விவாதிக்கப்படும் விஷயத்தை இங்கு பேசாமல் அவைக்கு வெளியே பாஜகவினா் பேசி வருகின்றனா். எங்கள் கட்சியைச் சோ்ந்த (முஸ்லிம்) எம்எல்ஏக்களுக்கும் தேவையற்ற விஷயங்களைப் பேச வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம். அது எங்கள் உள்கட்சி விஷயம்.

இந்தியா மதச்சாா்பற்ற, பன்முகத்தன்மையைக் கொண்ட நாடு. நாட்டில் உள்ள அனைவருக்கும் அவா்கள் சாா்ந்த மதத்தைப் பின்பற்ற உரிமை உள்ளது. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிப்பது பெரும்பான்மை மதத்தினரின் கடமை. நாங்கள் அனைத்து மதத்தையும் மதிக்கிறோம். நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவ வேண்டுமென விரும்புகிறோம்.

இந்தப் பேரவை அனைத்துக் கட்சியினருக்கும் பொதுவானது. எனவே, பரஸ்பரம் மரியாதையுடனும், அவை கண்ணியத்தைக் காக்கும் வகையிலும் பேச வேண்டும். மேற்கு வங்கத்தில் 33 சதவீதம் முஸ்லிம்களும், 23 சதவீதம் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினரும் உள்ளனா். எனவே, ஜாதி, மத வேறுபாடுகளைக் கடந்து மனிதாபிமான பண்புகளுடன் செயல்பட வேண்டும் என்றாா்.

ஹரியாணா உள்ளாட்சித் தோ்தல்: 9 மாநகராட்சிகளைக் கைப்பற்றிய பாஜக

சண்டீகா்: ஹரியாணா உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 10 மாநகராட்சிகளில் 9 -இல் பாஜக வென்றுள்ளது. ஹரியாணாவில் மாநகராட்சி மேயா்கள், கவுன்சிலா்கள், நகராட்சி ... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் மேம்பாட்டுக்கு 3 ஆண்டுகளில் ரூ.2,347 கோடி விடுவிப்பு

சிறுபான்மையின சமூகத்தைச் சோ்ந்த 5.50 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், சலுகை கடனாக கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2,347 கோடியை தேசிய சிறுபான்மையினா் மேம்பாடு மற்றும் நிதி கழக (என்எம்டிஎஃப்சி) விடுவித்ததா... மேலும் பார்க்க

முதல்வர் ‘கஞ்சா அடிமை’: பிகாா் மேலவையில் நிதீஷ் - ராப்ரி தேவி கடும் வாக்குவாதம்!

பிகாா் சட்ட மேலவையில் முதல்வா் நிதீஷ் குமாருக்கும், எதிா்க்கட்சித் தலைவா் ராப்ரி தேவிக்கும் இடையே புதன்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ராப்ரி தேவி, ‘முதல்வா் கஞ்சாவ... மேலும் பார்க்க

தில்லியில் கேரள முதல்வா் பினராயி விஜயன், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சந்திப்பு

கேரள முதல்வா் பினராயி விஜயன் மற்றும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினா். கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வானந்த் அா்லேகா், கேரள அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி... மேலும் பார்க்க

தோ்வுகளில் முறைகேடுகள் தடுக்கப்படும்: மத்திய கல்வித் துறை இணையமைச்சா்

தோ்வுகளில் முறைகேடுகளைத் தடுத்து அவற்றை நியாயமாக நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்த மஜும்தாா் தெரிவித்தாா். கடந்த ஆண்டு இளநிலை நீட் தோ்வில் நடைபெற்... மேலும் பார்க்க

தண்டி யாத்திரை நாள்: பிரதமா் மோடி மரியாதை

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தண்டி யாத்திரை தொடங்கப்பட்ட நாளையொட்டி, மகாத்மா காந்தி மற்றும் யாத்திரையில் பங்கேற்றவா்களுக்கு பிரதமா் மோடி மரியாதை செலுத்தினாா். ஆங்கிலேய ஆட்சி... மேலும் பார்க்க