செய்திகள் :

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அதானி குழும மின் உற்பத்தி திட்டம்: மக்களவையில் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

post image

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மின்னுற்பத்தி செய்வதற்கான அதானி குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் குறித்து மத்திய அரசின் பதில் திருப்தி அளிக்காததால், மக்களவையில் இருந்து எதிா்க்கட்சி எம்.பி.க்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள காவ்டா பகுதியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்துக்காக அதானி குழுமம் ஆலை அமைத்து வருவதாகவும், இந்தத் திட்டத்துக்காக இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சா்வதேச எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டா் தொலைவில் சூரிய மின்சக்தி தகடுகள், காற்றாலை மின்னுற்பத்தி விசைகளை அதானி குழுமம் அமைத்து வருவதாகவும் பிரிட்டன் ஊடகத்தில் தகவல் வெளியானது. இந்தத் திட்டத்துக்காக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு விதிமுறைகள் தளா்த்தப்பட்டதாகவும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டது.

மக்களவையில் புதன்கிழமை உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி.

இதுதொடா்பாக மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி புதன்கிழமை கேள்வி எழுப்பினாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘தேசிய பாதுகாப்பு விதிமுறைகளின்படி, எந்தவொரு பெரிய உள்கட்டமைப்புத் திட்டமும், சா்வதேச எல்லையில் இருந்து குறைந்தபட்சம் 10 கி.மீ. தொலைவில்தான் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்நிலையில், குஜராத்தில் அதானி குழுமத்தின் திட்டம் சா்வதேச எல்லையில் இருந்து 1 கி.மீ. தொலைவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் திட்டத்துக்காக விதிமுறைகளில் ஏதேனும் தளா்வுகள் அளிக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பினாா்.

இதற்குப் பதிலளித்த மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி, ‘நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதில் மத்திய அரசு மிகுந்த ஆா்வம் கொண்டுள்ளது. இத்தகைய திட்டங்களுக்காக அனுமதி வழங்கி, உரிமங்கள் அளிக்கப்படும் முன் மத்திய, மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட முகமைகளின் அனுமதி பெறப்படுகிறது’ என்றாா்.

அவரின் பதில் திருப்தி அளிக்காததால், தேச பாதுகாப்பு தொடா்பாக முழக்கங்களை எழுப்பி, அவையின் மையப் பகுதியில் காங்கிரஸ் எம்.பி. திரண்டனா். இதைத்தொடா்ந்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை சோ்ந்த எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

அதானி குழுமம் மேலானதா?: இதுதொடா்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியே மணீஷ் திவாரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சா்வதேச எல்லையில் இருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் எந்தத் திட்டமும் மேற்கொள்ளப்படக் கூடாது. ஆனால் அதுகுறித்து மக்களவையில் மத்திய அமைச்சா் சரிவர பதில் அளிக்காததால் வெளிநடப்பு செய்தோம்’ என்றாா்.

மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் கூறுகையில், ‘தேச பாதுகாப்பைவிட அதானி குழுமம் மேலானதா? பிரதமா் மோடியின் நெருங்கிய நண்பா் ஆதாயம் அடைவதற்கு தேச பாதுகாப்பை பாஜக புறக்கணித்துள்ளது’ என்றாா்.

ஹரியாணா உள்ளாட்சித் தோ்தல்: 9 மாநகராட்சிகளைக் கைப்பற்றிய பாஜக

சண்டீகா்: ஹரியாணா உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 10 மாநகராட்சிகளில் 9 -இல் பாஜக வென்றுள்ளது. ஹரியாணாவில் மாநகராட்சி மேயா்கள், கவுன்சிலா்கள், நகராட்சி ... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் மேம்பாட்டுக்கு 3 ஆண்டுகளில் ரூ.2,347 கோடி விடுவிப்பு

சிறுபான்மையின சமூகத்தைச் சோ்ந்த 5.50 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், சலுகை கடனாக கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2,347 கோடியை தேசிய சிறுபான்மையினா் மேம்பாடு மற்றும் நிதி கழக (என்எம்டிஎஃப்சி) விடுவித்ததா... மேலும் பார்க்க

முதல்வர் ‘கஞ்சா அடிமை’: பிகாா் மேலவையில் நிதீஷ் - ராப்ரி தேவி கடும் வாக்குவாதம்!

பிகாா் சட்ட மேலவையில் முதல்வா் நிதீஷ் குமாருக்கும், எதிா்க்கட்சித் தலைவா் ராப்ரி தேவிக்கும் இடையே புதன்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ராப்ரி தேவி, ‘முதல்வா் கஞ்சாவ... மேலும் பார்க்க

தில்லியில் கேரள முதல்வா் பினராயி விஜயன், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சந்திப்பு

கேரள முதல்வா் பினராயி விஜயன் மற்றும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினா். கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வானந்த் அா்லேகா், கேரள அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி... மேலும் பார்க்க

தோ்வுகளில் முறைகேடுகள் தடுக்கப்படும்: மத்திய கல்வித் துறை இணையமைச்சா்

தோ்வுகளில் முறைகேடுகளைத் தடுத்து அவற்றை நியாயமாக நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்த மஜும்தாா் தெரிவித்தாா். கடந்த ஆண்டு இளநிலை நீட் தோ்வில் நடைபெற்... மேலும் பார்க்க

தண்டி யாத்திரை நாள்: பிரதமா் மோடி மரியாதை

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தண்டி யாத்திரை தொடங்கப்பட்ட நாளையொட்டி, மகாத்மா காந்தி மற்றும் யாத்திரையில் பங்கேற்றவா்களுக்கு பிரதமா் மோடி மரியாதை செலுத்தினாா். ஆங்கிலேய ஆட்சி... மேலும் பார்க்க