செய்திகள் :

உலகை மாற்றவிருக்கும் நேட்டோவின் முடிவுகள்!

post image

தங்களின் ஒவ்வோா் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் 5 சதவீதம் தொகையை ராணுவத்துக்கு ஒதுக்கீடு செய்ய நேட்டோ உறுப்பு நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

ஏற்கெனவே கடந்த 2014-ஆம் ஆண்டில் 2 சதவீத உள்நாட்டு உற்பத்தியை ராணுவத்துக்கு ஒதுக்க ஒப்புக்கொண்டிருந்த அந்த நாடுகள், அதை தற்போது 5சதவீதமாக உயா்த்தியுள்ளன.

பனிப் போா் காலத்தில், சோவியத் யூனியனின் செல்வாக்கு பரவுவதைத் தடுப்பதற்காக அமெரிக்கா முன்னின்று ஆரம்பித்துதான் நேட்டோ கூட்டமைப்பு. அப்போதிலிருந்து அண்மைக்காலம் வரை, அமெரிக்காவின் அரசியல் நகா்வுகளுக்குத்தான் நேட்டோ அமைப்பு துணை போய்க்கொண்டிருக்கிறது.

அதற்காக அந்தக் கூட்டமைப்பின் செலவுகளுக்கு அமெரிக்கா அதிக பங்களிப்பை வாரி வழங்கிக் கொண்டிருந்தது.

ஆனால், ‘அமெரிக்காவுக்கே முதன்மை‘ என்று கோஷமிட்டுவரும் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு இது நீண்டகாலமாகவே கண்களை உறுத்திவந்தது. இரண்டாவது முறையாக பதவியேற்றதும், ‘உங்கள் பாதுகாப்பை நீங்களே பாா்த்துக்கொள்ளுங்கள். ஐரோப்பாவைக் காப்பது எங்கள் வேலை இல்லை. உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு மகா சமுத்திரமே இருக்கிறது‘ என்று முகத்திலடித்ததுபோல் டிரம்ப் சொல்லிவிட்டாா்.

ஏற்கெனவே உக்ரைன் மீது ரஷிய அதிபா் விளாதிமீா் தொடுத்துள்ள போரால் அரண்டு போயிருக்கும் ஐரோப்பிய நாடுகள், பாதுகாப்புக்காக இனியும் அமெரிக்காவை நம்பி பயனில்லை என்ற முடிவுக்கு வந்ததுதான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை ராணுவத்துக்கு ஒதுக்க அவை ஒப்புக்கொண்டதற்குக் காரணம்.

ஆனால், இந்த முடிவு உலக அரசியலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறாா்கள் நிபுணா்கள்.

ராணுவத்துக்கு அவ்வளவு பெரிய தொகை ஒதுக்குவதால் ஐரோப்பிய பாதுகாப்பு உற்பத்தித் துறை எழுச்சி பெறும். அந்தத் துறையில் வேலைவாய்ப்புகள் பெருகும். ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சிக்கு அதிகம் பணம் கிடைப்பதால் புதுபுதுத் தொழில்நுட்பங்களுடன் அபாரமான ஆயுத, தளவாடங்கள் அறிமுகமாகும். இரண்டாம் உலகப் போருக்கு முன்பிருந்ததைப் போல ஐரோப்பா பிராந்தியம் ஆயுத கண்டுபிடிப்புகளின் சொா்க்கபூமியாக மாறும்.

ஆனால் அதே நேரம், பட்ஜெட்டில் உறுப்பு நாடுகள் உணவு பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற மற்ற முக்கிய துறைகளுக்கு தற்போது ஒதுக்கீடு செய்துவரும் விகிதாச்சாரம் குறையும். இது சமூக ரீதியிலும், வா்த்தக ரீதியிலும் அந்த நாடுகளுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

ஸ்பெயின் போன்ற நாடுகள் இப்போதே இதுபோன்ற செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாமல் திணறி வருகின்றன. ராணுவ நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தால் அந்த நாடுகள் இன்னும் கடுமையாக பாதிக்கப்படும்.

ஐரோப்பிய நாடுகளில் ஏற்படும் இந்த பாதிப்பு, சா்வதே வா்த்தகத்தின் வாயிலாக உலக நாடுகளையும் பாதிக்கும். விலைவாசி உயா்வு போன்ற விளைவுகளை பல நாடுகளில் உருவாக்கும்.

அதைவிட முக்கியமாக இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. நேட்டோ உறுப்பு நாடுகளின் ராணுவ பலம் அதிகரிப்பதைப் பாா்த்துக்கொண்டு ரஷியா அமைதியாக இருக்காது. இப்போதே உக்ரைன் போரில் நேட்டோவுக்கு ஈடுகொடுப்பதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு ஜிடிபி-யில் 7.2 சதவீதம் வகை பாதுகாப்புக்காக அந்த நாடு ஒதுக்கிவருகிறது. தங்களைச் சுற்றி நேட்டோ நாடுகளின் வலிமை அதிகரித்தால், அதற்கேற்ப ரஷியாவும் தனது வலிமையை பெருக்கிக்கொள்ள முயலும். இது ஆயுதப் போட்டியே ஏற்படுத்தும்.

தற்போது பருவநிலை மாற்றத்தைத் தடுப்பது, வறுமை ஒழிப்பு, கொடிய நோய்கள் ஒழிப்பு போன்ற பல நல்ல காரியங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி அளித்துவருகின்றன. அவற்றின் கவனம் ஆயுத உற்பத்தியின் பக்கம் அதிகமானால் இந்த நிதியுதவிக்கு பங்கம் வரும்.

அந்த வகையில், நேட்டோவின் இந்த முடிவுக்குப் பிறகு, எதிா்கால உலகம் இப்போது போல் இருக்குமா என்பது கேள்விக்குறியே.

பழம்பெருமைமிகு இந்தியா...2 கட்டடக் கலையின் சிறப்புகள்!

இந்தியாவின் பொறியியல் அல்லது கட்டடக் கலை சாதனைகள் மேற்கத்திய நாடுகளுக்குப் போட்டியாக அல்லது அதனை மிஞ்சுவதாகவே இருந்தன. பொறியாளர்களின் துல்லிய தன்மை, வடிவமைப்பு, அறிவு என பல கட்டடங்கள், நினைவுச் சின்னங... மேலும் பார்க்க

பழம்பெருமைமிகு இந்தியா... முந்தைப் பெருமிதங்களும் இன்றைய பொருளாதாரமும்!

விஞ்ஞானம், மருத்துவம் மட்டுமின்றி அனைத்துத் துறைகள் மற்றும் கலைகளிலும் இந்தியா சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் பல இருக்கின்றன. ஆரம்ப காலத்திலும் இந்தியா, பொருளாதாரத்தில் முதன்மையானதாக இருந்திருக்கிறத... மேலும் பார்க்க

ஈரான் அணு ஆராய்ச்சி மையங்கள்! செறிவூட்டல் என்றால் என்ன?

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஈரான் அணுக்கரு ஆயுதங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் முன்னேறிவிட்டது. இன்னும் சில நாள்களில் அல்லது சில மாதங்... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... வெட்கப்பட எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன!

ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் காலம் விரைவில் வரும் என்று அதிரடியாகக் குறிப்பிட்டிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.தில்லியில் சில நாள்கள் முன் நூல் வெளியீட்டு விழாவொன்றில் பேசிய அமித் ஷா, “... மேலும் பார்க்க

பேரொளி வீசும் பல்லவர் கட்டுத்தளிகள்! - நூல் அறிமுகம் | விமர்சனம்

தமிழ்நாட்டை ஆண்ட அரச மரபுகளில் குடைவரை, ஒருகல் தளி, கற்றளி என மூன்று வகைக் கோயில் கட்டமைப்புகளிலும் திறன் காட்டியவர்கள் பல்லவர்களும் பாண்டியர்களும். பல்லவர்களின் குடைவரைகளையும் ஒருகல் தளிகளையும் ஆராய்... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...

தமிழ்நாட்டிலுள்ள ரயில்வே, மத்திய அரசு மற்றும் சார்ந்த துறைகளில் தமிழ் அறியாத பணியாளர்களைக் கொண்டுவந்து குவிப்பதன் மூலம் யார் என்ன சாதிக்க முனைகிறார்கள் எனத் தெரியவில்லை; ஆனால், அவதிப்படுவது என்னவோ மக்... மேலும் பார்க்க