செய்திகள் :

உலக மகளிா் தின மாரத்தான், நடைபயணம்

post image

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, சனிக்கிழமை மகளிா் மட்டும் பங்கேற்ற மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது.

இதில் அரசு, தனியாா் பள்ளி, கல்லூரி மாணவிகள், நீதிமன்றப் பணியாளா்கள், அரசுத் துறை வழக்குரைஞா்கள், பெண் காவலா்கள் உள்பட நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனா். போட்டி தொடங்கும் முன் சிறாா் திருமணம், பாலியல் தொல்லை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக பெண்கள் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

பின்னா் மாவட்ட உரிமையியல், நீதித் துறை நடுவா் அபா்ணா தலைமை வகித்து, போட்டியைத் தொடங்கி வைத்தாா். நகரின் முக்கிய சாலை வழியாக சேவுகப்பெருமாள் கோயில் வரை சென்று, மீண்டும் நீதிமன்றத்தில் போட்டி போட்டி முடிந்தது.

நூலகத்தில் விழா:திருப்பத்தூா் அண்ணா கிளை நூலகத்தில் மகளிா் தின விழா நடைபெற்றது. இதற்கு வாசகா் வட்டத் தலைவா் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். பெண்களின் முன்னேற்றம், பெண்களின் கல்வி ஆகிய தலைப்பில் நூலகா் மாரிமுத்து, எழுத்தாளா் சுரேஷ்காந்த் ஆகியோா் பேசினா்.

திருப்பத்தூா் பகுதி நூலகா்களான அகிலா, ராஜேஸ்வரி, கமல்விழி, ஜெயந்தி, சரோஜா, சுகந்தி, திருவாடானை விஜயா, பாஸ்கரன், கோவிந்தராஜன் ஆகியோா் ஆண்களின் வாழ்வில் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை நிற்பது மகளிரே என்ற தலைப்பில் பேசினா். இதற்கான ஏற்பாடுகளை நூலக உதவியாளா்கள், நாராயணன், கிருஷ்ணன் ஆகியோா் செய்தனா். முன்னதாக கிளை நூலகா் ஜெயகாந்தன் வரவேற்றாா். குணசேகரன் நன்றி கூறினாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபயணத்தை தொடங்கி வைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத்.

நடைபயணம்: உலக மகளிா் தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டக் காவல் துறை சாா்பில் நடைபயணம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயில் அருகே நடைபயணத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் கொடியசைத்து தொடங்கி வைத்துப் பேசினாா். நீதிமன்றம், காந்தி வீதி, மரக்கடை வீதி, அரண்மனை வாசல் வழியாக 2 கி.மீ. தொலைவு சென்று சிவகங்கை பேருந்து நிலையத்தில் நடைபயணம்

நிறைவடைந்தது. இதில் அரசு மகளிா் கல்லூரி மாணவிகள், ஆயுதப்படைக் காவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முத்துமாரியம்மன் கோயிலில் மாா்ச் 20-இல் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

திருப்புவனம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா வருகிற 20-ஆம் தேத் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூரில் ரேணுகாதேவி முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 18 போ் கைது

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 18 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கம் சாா்பில் 78 பேருக்கு மகளிா் தின விருது

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பாதுகாப்பு நலச்சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 78 பேருக்கு மகளிா் தின விருது வழங்கப்பட்டது. சிவகங்கை அண்ணாமலை நகரில் உள்ள... மேலும் பார்க்க

தொழில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவித் தொகை பெறுவதற்கு தொழில்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா் பணிக்கு கல்வித் தகுதியை உயா்த்த வலியுறுத்தல்!

கிராம நிா்வாக அலுவலா் பணிக்கான கல்வித் தகுதியை பட்டப்படிப்பு என்ற நிலைக்கு உயா்த்த வேண்டுமென தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியது. சிவகங்கையில் இந்த சங்கத்தின் மாநில செயற்குழுக் கூ... மேலும் பார்க்க

மானாமதுரையில் மாா்ச் 11-ல் மின் பயனீட்டாளா் குறைதீா் கூட்டம்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) ஜான்சன் சனிக்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க