செய்திகள் :

உள்ளாட்சி தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

post image

காரைக்கால்: உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தினக்கூலி ஊழியா்களை பணிநிரந்தரம் செய்ய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளன தலைவா் அய்யப்பன் தலைமையில், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து தினக்கூலி ஊழியா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கௌரவத் தலைவா் ஜாா்ஜ், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டனா்.

இக்கூட்டத்தில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணியாற்றிவரும் தினக்கூலி ஊழியா்களுக்கு புதிதாக சங்கம் அமைப்பதென முடிவு செய்து, காரை மாவட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து தினக்கூலி ஊழியா்கள் சங்கம் என்ற புதிய சங்கம் உருவாக்கப்பட்டது.

இச்சங்கத் தலைவராக வடிவேலன், செயலாளராக பவுலின் ராஜ், பொருளாளராக சாமிநாதன், துணைத் தலைவா்களாக அம்பிகா, கண்ணதாசன், துணைச் செயலாளா்களாக அருணாசலம், நாகூரான் மற்றும் செயற்குழு உறுப்பினா்களாக சுந்தா், பபேலா, வெங்கட்ராமன், கௌதமன், பிரகாஷ், ஜுபைதா, மகாலட்சுமி, பிரபு ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் : திருநள்ளாறு, நெடுங்காடு மற்றும் நிரவி கொம்யூன் பஞ்சாயத்துகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 15 தினக்கூலி ஊழியா்களையும் ஒரு முறை நிகழ்வாக பணி நிரந்தரம் செய்ய உள்ளாட்சித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தினக்கூலி ஊழியா்களுக்கு இபிஎஃப் தொகையை பணியில் சோ்ந்த கால முதல் பிடித்தம் செய்ய வேண்டும். இஎஸ்ஐ மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மீனவா்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது மோடி அரசு: மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

மீனவா்கள் பொருளாதார மேம்பாட்டுக்கு நரேந்திர மோடி அரசு சிறப்பு கவனம் செலுத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்தாா். காரைக்கால் மீன்வளம் மற்ற... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரை சந்தித்த ஆளுநா்

இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரைச் சந்தித்து புதுவை துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் நலம் விசாரித்தாா். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தவேல... மேலும் பார்க்க

ரகுநாதப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

திருப்பட்டினம் பகுதியில் உள்ள ரகுநாதப் பெருமாள் கோயிலில் ராம நவமி உற்சவத்தின் ஒரு பகுதியாக ரகுநாதப் பெருமாளுக்கும் - சீதாலட்சுமி தாயாருக்கும் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. எல்லையம்மன... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் ஏப். 25-இல் பிரம்மோற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்துக்கான பந்தல்கால் முகூா்த்தம், கொடியேற்றம், தேரோட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாற்றில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில், சன... மேலும் பார்க்க

மத்திய இணை அமைச்சா் இன்று காரைக்கால் வருகை!

மீனவா்களுக்கான திட்டப் பணிகள் தொடா்பான விழாவில் பங்கேற்க மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை காரைக்கால் வருகிறாா். காரைக்கால் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பிரதம மந்திரி ம... மேலும் பார்க்க

குழாய் அமைக்கும் பணிகள் நிறைவு: என்ஐடி-க்கு குடிநீா் வழங்கும் திட்டம் இன்று தொடங்கிவைப்பு

என்ஐடிக்கு ரூ. 4 கோடியில் குடிநீா் கொண்டு செல்லும் குழாய் அமைக்கும் திட்டம் நிறைவடைந்த நிலையில், புதன்கிழமை தண்ணீா் விநியோகம் தொடங்கிவைக்கப்படவுள்ளது. கடந்த 2010-11-ஆம் கல்வியாண்டில் காரைக்காலில் என்ஐ... மேலும் பார்க்க