செய்திகள் :

உ.பி. அரசுப் பள்ளிகளில் தமிழ்: முதல்வர் ஆதித்யநாத் தகவல்

post image

உத்தர பிரதேச அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி ஆகிய மொழிகள் பயிற்றுவிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டி:

உத்தர பிரதேசம் வளர்ச்சியில் எழுச்சி பெற்றுள்ளது. இந்த மாநிலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. மொழியை வைத்து அரசியல் செய்யும் தலைவர்களைக் கொண்டுள்ள மாநிலங்கள் வளர்ச்சியில் சரிவைச் சந்தித்து வருகின்றன.

பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்வது எந்த மாநிலத்தின் முக்கியத்துவத்தையும் குறைத்து விடாது. உத்தர பிரதேச அரசுப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி ஆகிய மொழிகள் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகின்றன. இதனால் உத்தர பிரதேசத்தின் மகத்துவம் குறைந்ததா?

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் அல்லது மராத்தி போன்ற மொழிகள் தேசிய ஒருமைப்பாட்டின் மையமாக உருவெடுக்க முடியும்.

உத்தர பிரதேசத்தில் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மொழியை வைத்து நடத்தப்படும் குறுகிய அரசியலால் இளைஞர்களுக்கான வாய்ப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும்.

சில மாநிலங்களில் மொழியை வைத்து தலைவர்கள் அரசியல் செய்கின்றனர். அந்த மாநிலங்கள் வளர்ச்சியில் சரிவைச் சந்திப்பதற்கு இதுவே காரணம். அவர்களுக்கு அரசியல் செய்ய வேறு காரணங்கள் இல்லை. இதனால் தங்களது அரசியல் ஆதாயத்துக்காக உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அரசியல் செய்கின்றனர்.

ஹிந்தி மொழி மதிக்கப்பட வேண்டும் என்று அனைவரும் நம்புகின்றனர். எனினும் மும்மொழிக் கொள்கையை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.

பிராந்திய மொழிகளும் அதே மரியாதையைப் பெறுவதை மும்மொழிக் கொள்கை உறுதி செய்கிறது. ஒவ்வொரு மொழிக்கும் தனித்தன்மை உள்ளது.

ஒவ்வொரு மொழிக்கும் நாட்டுப்புற பாரம்பரியம் உள்ளது. அவை நாட்டின் பன்முகத்தன்மையை வலுப்படுத்துகின்றன. இதற்கு சிறந்த உதாரணமாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியைக் கூறலாம். இந்த நிகழ்ச்சி இந்தியாவின் தொன்மையான மொழிகளான தமிழையும் சமஸ்கிருதத்தையும் இணைக்கிறது என்றார் அவர்.

சம்பல் ஜாமா மசூதியின் பெயரை மாற்றிய தொல்லியல் துறை!

சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் பெயரை ‘ஜும்மா மசூதி’ எனக் குறிப்பிட்டுள்ள பெயர்ப்பலகையை தொல்லியல் துறையினர் மசூதியில் நிறுவவுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள ஜாமா மசூதியின் உள்ளே கோவில்... மேலும் பார்க்க

வளர்ச்சித் திட்டங்கள் மறுஆய்வு: ஜம்மு-காஷ்மீரில் அமித் ஷா தலைமையில் முக்கிய கூட்டம்!

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை மறுஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தொடங்கியது. ஆளுநர் மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் ஜம்மு-காஷ்... மேலும் பார்க்க

ஹைதராபாத் குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் 5 பேருக்கு மரண தண்டனை உறுதி!

ஹைதராபாத்தில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதான குற்றவாளிகள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை தெலங்கானா உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.ஹைதராபாத்தின் தில்சுக்நகர் பக... மேலும் பார்க்க

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!

அகமதாபாத்: காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மற்றும் தேசிய மாநாடு ஆகிய இருபெரும் நிகழ்ச்சிகள் குஜராத்தின் அகமதாபாதில் இன்று(ஏப். 8) தொடங்கியுள்ளன.இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகாா் பேரவைத் தோ்தலில் பா... மேலும் பார்க்க

'மக்களுக்காக ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படுத்துவோம்' - ராகுல் காந்தி

மக்கள் நலனில் காங்கிரஸ் கட்சியின் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட்... மேலும் பார்க்க

விமான நிலையம் வழியாக ஆராட்டு உற்சவம்: திருவனந்தபுரத்தில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம்!

திருவனந்தபுரம்: கேரள தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக ஏப். 11-ஆம் தேதி பத்மநாபசுவாமி கோவில் பங்குனி ஆராட்டு உற்சவம் நடைபெறுவதையொட்டி திருவனந்தபுரத்தில் அன்று ஒருநாள் மட்டும் விமான சேவை தற்க... மேலும் பார்க்க