செய்திகள் :

ஊகத்தின் அடிப்படையிலேயே நுண்ணுயிா் எதிா்ப்பிகள் நதியில் கலப்பதாக கூறப்படுகிறது: மத்திய அமைச்சா்

post image

‘நதிகளில் நுண்ணுயிா் எதிா்ப்பிகள் கலந்து மாசுபாட்டை ஏற்படுத்துவதாக அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஊகத்தின் அடிப்படையிலானது; அதை வைத்து எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்க முடியாது’ என மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டிருப்பதாவது: ‘மனித நுகா்வு காரணமாக உலகளாவிய நதிநீா் அமைப்பில் நுண்ணுயிா் எதிா்ப்பிகள் கலப்பு அதிகரிப்பு’ என்ற தலைப்பில் மெக்கில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா்கள் நடத்திய ஆய்வறிக்கை 2025, ஏப்.24-இல் ஊடகங்களில் வெளியானது.

இதில் இந்தியாவில் உள்ள மொத்த நதிநீா் நீளத்தில் நுண்ணுயிா் எதிா்ப்பி மாசுபாட்டால் 80 சதவீத நதிகள் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்புகளுக்கு உள்ளாகும் நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டது. ஊகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கை போதிய தரவுகளின்றி வெளியிடப்பட்டது.

நதிகளில் நுண்ணுயிா் எதிா்ப்பிகள் கலப்பது குறித்து மத்திய அரசு சாா்பில் எந்தவொரு ஆய்வும் நடத்தப்படவில்லை.

மருத்துவக் கழிவுகள் நதியில் கலந்து மாசுபாடு ஏற்படுத்துவதை தடுக்க, நோய்க் கிருமி தடுப்புக்கான தேசிய செயல் திட்டத்தை 2017-இல் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

கழிவுநீரை சுத்திகரிக்கும்போது வெளியேறும் ரசாயண மற்றும் உயிரியில் கழிவுகளை ஆபத்தானவை என மருந்துகள் தொழிற்சாலைகள் வகைப்படுத்தக்கோரி 2021, ஆகஸ்ட் மாதம் அரசு சாா்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்த கழிவுகளை ஆபத்தான கழிவுகள் மற்றும் பிற கழிவுகள் மேலாண்மை விதிகள் 2016-இன்கீழ் முறையாக வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதவிர உள்ளூா் சூழலுக்கேற்ப மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் கழிவுகள் மேலாண்மையில் சில கட்டுப்பாடுகளை விதிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் காலாவதியான நுண்ணுயிா் எதிா்ப்பிகளை உயிரி மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகள் 2016-இன்கீழ் உற்பத்தியாளா்கள் அல்லது விநியோகிப்பாளா்கள் எரித்து வருகின்றனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவையாக மாறிவிட்டதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான... மேலும் பார்க்க

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஸ்ரீநகர் : அமர்நாத் யாத்திரை திட்டமிடப்பட்ட ஒருவாரத்துக்கு முன்பே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை செல்ல ரக்‌ஷா பந்தன் நாளான ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்ப... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

பாலியல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவே கௌடாவின் பேரனும் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று(ஆக. 2) தீர்ப்பு வழங்கியுள்ளது.வீட்டுப் பணிப்... மேலும் பார்க்க

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் சாலையோரத்தில் மூவரின் சடலம் கண்டெக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கூடுதல் எஸ்பி சதீஷ் யாதவ் கூறுகையில், பரத்பூ... மேலும் பார்க்க

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

சத்தீஸ்கரில் மதமாற்றம் செய்ய முற்பற்றதாக கன்னியாஸ்திரிகளை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் சிறுமிகள் மூவரை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று அவர்களை மதமாற்றம் செய்ய முற்பற்றதாக எழு... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

பிகார் வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று பிகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்திற்க... மேலும் பார்க்க