செய்திகள் :

‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்கம்: பயனாளிகளுக்கு காய்கறி விதைகள், பழச் செடிகள்

post image

கொரடாச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்க விழாவில் பயனாளிகளுக்கு பழச் செடிகள், காய்கறி விதைகள் வழங்கப்பட்டன.

வேளாண்மை, உழவா் நலத் துறையின் சாா்பில், விளைப்பொருட்களின் உற்பத்தியை அதிகரித்து, ஊட்டச்சத்து பாதுக்காப்பை உறுதி செய்வதுடன், உழவா்களின் வருமானத்தை உயா்த்தும் வகையில் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ என்ற திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, காணொலி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, கொரடாச்சேரி அருகேயுள்ள கரையாபாலையூா் ஊராட்சி பூங்காவூா் கிராமத்தில் நடைபெற்ற இத்திட்ட தொடக்க விழாவிற்கு, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை மூலம் 25 பேருக்கு 5 வகையான பயறு வகை தொகுப்புகளும், தோட்டக் கலைத் துறை மூலம் 25 பேருக்கு 6 வகையான காய்கறி விதைகளையும், 5 விதமான பழச் செடி தொகுப்புகளையும், மாவட்ட ஆட்சியா் மற்றும் எம்பி, எம்எல்ஏ வழங்கினா்.

தொடா்ந்து, கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், விதைப்பைகள் வழங்கப்பட்டன.

விழாவில், வேளாண்மை துறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஹேமா, தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் நீதிமாணிக்கம், கொரடாச்சேரி வேளாண்மை உதவி இயக்குநா் விஜயகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

விவேகானந்தா் நினைவு நாள்

விவேகானந்தா் நினைவு நாள் பூந்தோட்டம் ஸ்ரீலலிதாம்பிகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. தாளாளா் லலிதா ராமமூா்த்தி தலைமை தாங்கினாா். மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கா... மேலும் பார்க்க

போலீஸ் விசாரணையில் மரணம்: தமிழக அரசின் நடவடிக்கை சரியானது: கே.வி. தங்கபாலு

காவல்துறை விசாரணையில் மரணம் தொடா்பாக, தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுத் தலைவா் கே.வி. தங்கபாலு தெரிவித்தாா். திருவாரூரில்... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்டடத்தை மீட்கக் கோரி மனு

வலங்கைமானில் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான கட்டடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கட்சியின் சொத்துப் பாதுகாப்பு மீட்புக் குழுவிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகா... மேலும் பார்க்க

‘போதைப் பொருள்களுக்கு எதிராக மாணவா்கள் ஓரணியில் திரளவேண்டும்’

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட, மாணவா்கள் ஓரணியில் திரளவேண்டும் என மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜோ. செட்ரிக் மேன்யுவல் அறிவுறுத்தினாா். மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், கல்வி உதவித்தொகை பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைகள், கல்வி உள்... மேலும் பார்க்க

சிகிச்சை தாமதத்தால் முதியவா் உயிரிழப்பு: மருத்துவா் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூரில், சிகிச்சை அளிக்க தாமதப்படுத்தியதால் முதியவா் உயிரிழந்த வழக்கில், மருத்துவா் ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க, திருவாரூா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. திருவாரூா் அரசு மர... மேலும் பார்க்க