செய்திகள் :

ஊட்டி: "நான் பெற்ற பிள்ளைக்குப் பெயர் வைக்கும் வேலையைச் செய்கிறார் ஸ்டாலின்" - இபிஎஸ் தாக்கு

post image

'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார்.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் நேற்று நண்பகல் குன்னூரில் உரை நிகழ்த்திய எடப்பாடி பழனிசாமி, அதனைத் தொடர்ந்து ஊட்டியிலும் உரை நிகழ்த்தினார்.

பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் முன்னிலையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அ.தி.மு.க- வைப் பிளக்க எல்லா வகையிலும் சதி செய்து வருகிறது தி.மு.க. ஆனால், உண்மையைச் சொல்ல வேண்டுமானால் தி.மு.க கூட்டணியில்தான் பிளவு ஏற்பட்டிருக்கிறது. ஆட்சியில் பங்கு வேண்டும் என இப்போதே காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

இந்த விவகாரத்தால் தி.மு.க கூட்டணியில் பெரிய அளவிலான விரிசல் ஏற்பட்டிருக்கிறது. ஒருநாளைக்கு ஒரு திட்டம் என்கிற அடிப்படையில் ஏகப்பட்ட திட்டங்களை அறிவித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், எந்தத் திட்டமும் செயல்பாட்டில் இல்லை.

வீண் விளம்பரங்களுக்காகவே இதுபோன்ற திட்டங்களை அறிவித்து வருகிறார். மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தாலிக்கு தங்கம், இலவச வேட்டி, சேலை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைக்கிறார்கள். ஊட்டி மெடிக்கல் காலேஜ் இதற்குச் சிறந்த உதாரணம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் பெற்ற பிள்ளைக்குப் பெயர் வைக்கும் வேலையைச் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்" என்றார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன்... ரத்து செய்ய கோரிய நடிகையின் மனு தள்ளுபடி

கடந்த அ தி மு க ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தவர் ராமநாதபுரத்தை சேர்ந்த மணிகண்டன். இவர் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதுடன் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கர்ப்பமான தன்னை கட்ட... மேலும் பார்க்க

அண்ணாமலையுடன் பேசியது என்ன? - டிடிவி தினகரன் விளக்கம்

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை டிடிவி தினகரனைச் சந்தித்துப் பேசியது தமிழக அரசியலில் பேசுபொருளானது. இந்நிலையில் இன்று (செப். 24) செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ட... மேலும் பார்க்க

கோவை: திமுகவுக்கு `டாடா' சொன்ன முன்னாள் ஊராட்சித் தலைவர்; தட்டித் தூக்கிய பாஜக, செந்தில் பாலாஜி ஷாக்

கொங்கு மண்டலம்தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தல் என்றால் வியூகங்கள் இருப்பது வழக்கம். அதில் மாற்றுக் கட்சியினரை தங்களின் கட்சிக்கு... மேலும் பார்க்க

எட்டப்ப மன்னர் பற்றி அவதூறு? "சினிமாதானே என விட்டது பின்னாளில்" - எட்டயபுர மன்னர் தலைமையில் கண்டனம்

எட்டயபுரம் சமஸ்தான மன்னர் பற்றிய தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதைக் கண்டித்தும், வரலாற்றுத் தகவல் பிழையை நீக்க வலியுறுத்தியும், உண்மை வரலாறு குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதனை வலியுறு... மேலும் பார்க்க

H-1B விசாவில் மீண்டும் மாற்றம்: அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய உத்தரவு - முழு விவரம்

தற்போது உலகம் முழுக்கவே H-1B விசா குறித்து பேச்சுகள் சுற்றி வருகின்றன. கடந்த 22-ம் தேதி முதல், புதிய ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்காவிற்குள் செல்பவர்கள் 1 லட்சம் டாலர்கள் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க... மேலும் பார்க்க

தவெக: ``தம்பி விஜய் புதிதாக அரசியலுக்கு வந்திருப்பதால் அப்படிப் பேசியிருக்கிறார்" - குஷ்பு

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி குறைப்புக்குப் பிறகு பல்வேறு மின்சாதனங்கள் உள்ளிட்ட பல பொருள்களின் விலை குறைந்திருக்கிறது.மேலும், ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவை பா.ஜ.க தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டிவருகி... மேலும் பார்க்க