செய்திகள் :

ஊட்டி: ஹோட்டல் குளியலறை சுவரில் ஃபிளாஷ் லைட்; பதறிய பெண்; விசாரணையில் பகீர் தகவல்; என்ன நடந்தது?

post image

ஊட்டியில் கோடை‌ சீசன் நிறைவடைந்திருந்தாலும், தற்போது நிலவி வரும் குளிர்ந்த காலநிலையை அனுபவிக்க அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். கேரளா மாநிலத்தைச்‌‌ சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 5-ம் தேதி குடும்பத்துடன் ஊட்டிக்குச் சுற்றுலா வந்திருக்கிறார்.

ஊட்டியில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் குடும்பத்துடன் தங்கி ஊட்டியைச்‌ சுற்றிப் பார்த்திருக்கிறார். தங்கும் விடுதியில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருக்கையில் சுவரின் சிறிய துளையிலிருந்து திடீரென செல்போன் ஃபிளாஷ் லைட் ஒளிர்ந்திருக்கிறது.

சித்திரிப்புப் படம்

பதறிய அந்தப் பெண் உடனடியாக உடையை மாற்றிக் கொண்டு காவல்துறையினரைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்திருக்கிறார். சம்மந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு விரைந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தங்கும் விடுதியில் பணியாற்றி வந்த 30 வயதான நபர் ஒருவர், இளம்பெண்ணை வீடியோ எடுத்ததை உறுதி செய்துள்ளனர். உடனடியாக அந்த இளைஞனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இது குறித்துத் தெரிவித்துள்ள காவல்துறையினர், "ஹோட்டல் பணியாளர்கள் தங்கும் அறையின் சுவரில் சிறிய துளை ஒன்று தென்பட்டது.‌ அதிலிருந்து பார்த்தால் அருகில் உள்ள தங்கும் விடுதியின் குளியலறை தெரிகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த ஹோட்டலில் ரூம் பாயாகப் பணியில் சேர்ந்த கேரளாவைச் சேர்ந்த 30 வயதான நித்திஷ் என்கிற நபர், அந்தத் துளை வழியாக செல்போன் மூலம் பெண்களை வீடியோ எடுத்து வந்திருக்கிறான். இதுவரை 5 பெண்களை இதுபோன்று வீடியோ எடுத்துள்ளான்.

spying

இந்த முறை வீடியோ எடுக்கையில் ஃபிளாஷ் லைட் ஆன் ஆகியிருக்கிறது. அதன் காரணமாகவே பிடிபட்டுள்ளான். அவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். தங்கும் விடுதிகளில் பயணிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

சென்னையில் நடந்த கொலை.. கோவை கிணற்றில் வீசப்பட்ட உடல்.. 50 நாள்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை

கோவை செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று இரண்டு பேர் கொலை வழக்கு ஒன்றில் சரணடைந்தனர். விசாரணையில் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த பாலமுருகன் (45) மற்றும் பாளையங்கோட்டை பகுதிய... மேலும் பார்க்க

கோவை தனியார் நிறுவனம் அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த கை - காவல்துறை விசாரணையில் அதிர்ச்சி

கோவை மாவட்டம், சூலூர் அருகே கள்ளப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வளாகம் அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் மனித கை ஒன்று கண்டறியப்பட்டது. அதன் அருகிலேயே ரயில் தண்டவாளம் இருக்கிறது.கோவை ஏதாவது... மேலும் பார்க்க

தேனி: பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் இன்ஜின் மோதி 14 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்

தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர்கள் வடிவேல் - அருள் ஆனந்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள். அருள் ஆனந்தி ஆண்டிப்பட்டியில் உள்ள நிறுவனத்தில் கூலி வேலைக்கு சென்று வருகிறார். ஆனந்தி வேலைக்கு செ... மேலும் பார்க்க

சேலம்: நகைக்கடை உரிமையாளர்கள் மீது ஆசிட் வீசி நகைக் கொள்ளை முயற்சி; மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!

சேலம் மாவட்டம், ஆத்தூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன். இவர் அப்பகுதியில் ஏ.வி.எஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு 8:45 மணியளவில் இருவர் நகை வாங்குவதற்கு வந்துள்ளனர். அப்போது ... மேலும் பார்க்க

`திருமணம், நட்பு, ஆபாச மெசேஜ்' - Facebook -ல் பழகிய பெண்களிடம் ரூ.9 கோடியை இழந்த முதியவர்

சைபர் கிரிமினல்கள் அடிக்கடி பெண்கள் மற்றும் முதியவர்களிடம் பணமோசடி புகார் அல்லது திருமண ஆசை என எதாவது ஒரு காரணத்தை சொல்லி பணம் பறிக்கின்றனர். அதிகமான நேரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் ம... மேலும் பார்க்க

அந்தியூர் குதிரை சந்தை: மர்மமான முறையில் இறந்த 6 குதிரைகள்; பிரேதப் பரிசோதனை முடிவு சொல்வது என்ன?

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்துள்ள புதுப்பாளையத்தில் அமைந்துள்ள குருநாதசாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும்.ஆண்டுதோறும் ஆடி மாதம் குருநாதசுவாமி கோவிலின் திருவிழா மிக விமர்சையாக நடைபெறும்... மேலும் பார்க்க