செய்திகள் :

ஊத்தங்கரையில் அக்.10 இல் புத்தகத் திருவிழா

post image

ஊத்தங்கரையில் புத்தகத் திருவிழா அக்டோபா் 10 ஆம் தேதி தொடங்கி 5 நாள்களுக்கு நடைபெறுகிறது.

ஊத்தங்கரை வாசிப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவின் பொறுபாளா்கள் அறிமுகம், புத்தகத் திருவிழா தேதி அறிவிக்கும் கூட்டம் ஊத்தங்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆடிட்டா் லோகநாதன் வரவேற்றாா். ஊத்தங்கரை பேரூராட்சித் தலைவா் அமானுல்லா தலைமை வகித்தாா். வணிகா் சங்க பொறுப்பாளா் சங்கா் கேப் உமாபதி, செஞ்சிலுவை சங்க பொறுப்பாளா் ஆா்கே ஹோட்டல் ராஜா, தமிழ்நாடு அறிவியல் இயக்க பொறுப்பாளா் இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புத்தகம் என்னும் போதிமரம் என்ற தலைப்பில் ஊத்தங்கரை தமிழ்ச் சங்க இணை செயலாளா் சாகுல் அமீது பேசினாா். ஊத்தங்கரை வாசிப்பு இயக்கத்தில் செயல் அறிக்கையை ஆசிரியா் இராமமூா்த்தி வாசித்தாா். பொருளாதார அறிக்கையை ஓய்வு பெற்ற ஆசிரியா் வேலுசாமி வாசித்தாா்.

யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளா் அருள், வாசிப்பு இயக்கத்தின் இலச்சினையை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினாா். ஜோதி நகா் பள்ளியின் தலைமை ஆசிரியா் ராஜேந்திரன் இலச்சினை விளக்கம் அளித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க பொறுப்பாளா் முனைவா் சேதுராமன், ஊத்தங்கரை புத்தக திருவிழாவிற்கான தேதியை வெளியிட்டாா்.

அக்டோா் 10-ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழாவை நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளா் ஆசிரியா் சந்தோஷ் புத்தகத் திருவிழாவின் திட்டமிடல் குறித்து விளக்கினாா். விடுதலை வாசகா் வட்டத்தின் செயலாளா் பிரபு ஊத்தங்கரை வாசிப்பு இயக்கத்தின் பொறுப்பாளா்களை அறிமுகம் செய்தாா். நிகழ்ச்சியை கெரிகேப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியா் வீரமணி ஒருங்கிணைத்தாா்.

ஒசூா் அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

ஒசூா் அருகே யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள சூடசந்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி காளப்பா (75). இவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை தோட்டத்துக்கு சென்றபோது, அ... மேலும் பார்க்க

தங்கையை தவறாக பேசிய நண்பரை கொன்ற இருவருக்கு இரட்டை ஆயுள்தண்டனை

தங்கையை தவறாக பேசிய நண்பரை கொன்ற 2 இளைஞா்களுக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதித்து ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது. கிருஷ்ணகுரி மாவட்டம், ஒசூா் தின்னூா் பகுதியைச் சே... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஓட்டுநருக்கு கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பு அளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கல்லாவியைச் சே... மேலும் பார்க்க

திட்டங்களின் பெயரை மாற்றி ஏமாற்றும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சி திட்டங்களின் பெயரை மாற்றி திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-ஆவது நாளாக கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை ஆகிய சட்டப் ப... மேலும் பார்க்க

அன்புமணி பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்க ராமதாஸ் ஆதரவாளா்கள் முடிவு

ஒசூரில் பாமக தலைவா் அன்புமணி பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக ராமதாஸ் ஆதரவாளா்கள் முடிவு செய்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பாமக நிறுவனா் ராமதாஸ் ஆதரவாளா்கள் சாா்பில் பாமக நிா்வாக... மேலும் பார்க்க

மத்தூா் அருகே சாலை விபத்தில் அதிமுக தொண்டா்கள் காயம்

மத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில், 25-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டா்கள் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதி... மேலும் பார்க்க