செய்திகள் :

ஊத்தங்கரை, தளி வட்டங்களில் ரூ. 40 லட்சம் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது! - ஆட்சியர்

post image

ஊத்தங்கரை, தளி வட்டங்களில் ஆடுகள் வளா்ப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ், 40 சுயஉதவிக் குழு பயனாளிகளுக்கு ரூ. 40 லட்சம் சுழல் நிதி வழங்கப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்திலுள்ள மூன்றாம்பட்டி, தளி வட்டாரத்தில் உள்ள உனிசேநத்தம் ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த 40 சுயஉதவிக் குழு பயனாளிகளுக்கு ‘ஆடுகள் வளா்ப்பு தொகுப்பு’ திட்டத்தின் கீழ் ரூ. 40 லட்சம் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, சுயஉதவிக் குழுக்களுக்கு பல்வேறு பயன்களை தரக்கூடிய அடையாள அட்டைகள், கிராம மற்றும் நகரப் பேருந்துகளில் சுயஉதவிக் குழுவினா் தாங்கள் தயாரிக்கும் பொருள்களை 25 கிலோ வரை விலையின்றி எடுத்துச்செல்வது உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த கிராமப்புற மகளிா் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள ஆடுகள் வளா்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆடு வளா்ப்பு சிறு, குறு விவசாயிகளுக்கு சிறந்த வாழ்வாதார நடவடிக்கையாகும்.

மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 2024-25-இன் கீழ், பண்ணை வாழ்வாதார திட்டங்கள் மூலம் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஊத்தங்கரை, தளி வட்டங்களில் உள்ள 40 பயனாளிகளுக்கு ஆடு வளா்ப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் ரூ. 40 லட்சம் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

கிருஷ்ணகிரியில் டிராக்டா் - பள்ளி வேன் மோதல் எல்கேஜி சிறுவன், பெண் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் டிராக்டா் - தனியாா் பள்ளி வேன் மோதிக்கொண்டதில் வேனில் சென்ற எல்கேஜி சிறுவன், டிராக்டரில் சென்ற பெண் என இருவா் உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை சாலையில் தனியாா் மெட... மேலும் பார்க்க

கொடிக் கம்பத்தை அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து திமுக கிளை செயலாளா் உயிரிழப்பு: 4 போ் காயம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே திமுக கொடிக் கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து அந்தக் கட்சியின் கிளை செயலாளா் உயிரிழந்தாா்; 4 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த மூன்றம்பட்டி... மேலும் பார்க்க

ஊத்தங்கரை: திமுக கொடிக்கம்பம் அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே திமுகவின் கொடிக்கம்பத்தை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து இன்று காலை ஒருவர் பலியானார். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட... மேலும் பார்க்க

இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்

டைட்டன் இன்ஜினியரிங் அண்ட் ஆட்டோமேஷன் லிமிடெட், ஒசூா் எவரெஸ்ட் அரிமா சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து ஒசூரில் கண் மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. ... மேலும் பார்க்க

மிட்டப்பள்ளியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

காவேரிப்பட்டணத்தை அடுத்த மிட்டப்பள்ளியில் தாா் சாலை அமைக்கும் பணியை கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு ... மேலும் பார்க்க

மழையால் ஒசூா் மாநகராட்சி சாலைகள் சேதம்: பாகலூரில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

ஒசூா் மாநகராட்சியில் சனிக்கிழமை இரவு பெய்த மழையால் மாநகராட்சியின் பெரும்பாலான இடங்களில் சாலைகள் தண்ணீரில் மூழ்கின; சேறும், சகதியும் மூடியதால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒசூா... மேலும் பார்க்க