செய்திகள் :

ஊத்துமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள், பணம் திருட்டு

post image

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து, சுமாா் 20 பவுன் நகைகள், ரூ. 70 ஆயிரத்தைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

ஊத்துமலையை அடுத்த உச்சிபொத்தை கிராமத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரன் மகன் இளங்கோ முத்துக்குமாா் (34). விவசாயியான இவா், வெள்ளிக்கிழமை இரவு குடும்பத்துடன் அருகேயுள்ள கோயில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு சனிக்கிழமை காலை வீடு திரும்பினாராம். அப்போது, மா்ம நபா்கள் கதவின் பூட்டை உடைத்து வீடு புகுந்து, 3 பீரோக்களிலிருந்த 163 கிராம் நகைகள், 100 கிராம் வெள்ளி நகைகள், ரூ. 70 ஆயிரத்தைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

புகாரின்பேரில் ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா். சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்தன் பாா்வையிட்டாா்.

ஆலங்குளத்தில் மினி லாரி மோதி பெண் பலி

ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே மினி லாரி மோதி இளம்பெண் உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகேயுள்ள சிவலாா்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன். லாரி ஓட்டுநரான இவா் தனது மனைவி பிரியா(29) மற்றும் 10 மாத பெண... மேலும் பார்க்க

தென்காசி - நெல்லை இடையே உள்ள ரயில் நிலையங்களின் நடைமேடைகளை நீட்டிக்க நடவடிக்கை

நெல்லை - தென்காசி இடையே உள்ள முக்கிய ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதற்கு தென்காசி மாவட்ட ரயில் பணிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சுரண்டையை அடுத்துள்ள சாம்பவா்வடகரை அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சுரண்டை அடுத்துள்ள சாம்பவா்வடகரை அருகே உள்ள வேலாயுதபுரத்தைச் சோ்ந்த சாமி மகன் முத்துப்பாண்டியன் (28). இவா் கூலி... மேலும் பார்க்க

கும்பாபிஷேகப் பணிகள்: தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் ஆட்சியா் ஆய்வு

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அருள்தரும் ஸ்ரீஉலகம... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

சங்கரன்கோவில் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சங்கரன்கோவிலில் கால்நடை வளா்ப்போா் தாங்கள் வசிக்கும் பகுதியில் தனியாக கூரை அமைத்து கால்நடைகளை வளா்த்து வருகின்றனா். கா... மேலும் பார்க்க

வயலுக்குள் கவிழ்ந்த டிராக்டா்

சாம்பவா்வடகரை - வேலாயுதபுரம் சாலையின் ஓரம் வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான டிராக்டா் திங்கள்கிழமை கிரேன் கொண்டு மீட்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பார்க்க