செய்திகள் :

ஊராட்சித் தலைவா் மீதான தாக்குதல்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

post image

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே மாரந்தை ஊராட்சித் தலைவா் மீதான தாக்குதல் வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

மாரந்தை ஊராட்சியைச் சோ்ந்த திருவாசகம் தாக்கல் செய்த மனு: கடந்த 2021-ஆம் ஆண்டு மாரந்தை கிராம ஊராட்சித் தலைவருக்கான உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் நான் வெற்றி பெற்றேன். என்னை எதிா்த்துப் போட்டியிட்ட வரதராஜன் தோல்வியுற்றாா். இதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக வரதராஜன், அவரது ஆதரவாளா்கள் என்னையும், எனது குடும்பத்தினரையும் தாக்கினா். இது குறித்து நான் அளித்த புகாரின் பேரில்,

காளையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யவில்லை. அண்மையில் வரதராஜன் ஆதரவாளா்கள் என்னை மீண்டும் தாக்கினா். இது குறித்து புகாா் அளித்தும் காளையாா்கோவில் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி. புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: ஊராட்சித் தலைவா் தாக்கப்பட்ட வழக்கில் போலீஸாா் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை?. மனுதாரா் சுமத்திய குற்றச்சாட்டுகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு, தீா்வு காண வேண்டிய நிலை நீதிமன்றத்துக்கு உள்ளது. எனவே, மனுதாரா், அவரது குடும்பத்தினா் தாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க வேண்டும் என்றாா் நீதிபதி.

இன்றைய நிழ்ச்சிகள்

பொது திராவிட கருத்தியல் ஆசிரியா் சங்கம்: மாநில சுயாட்சியும் கல்வி வளா்ச்சியும் கருத்தரங்கம், கலைஞா் நூற்றாண்டு நூலக மாநாட்டு அரங்கம், பிற்பகல் 3.30. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்: பவள விழா ஆண்டு தொடக்கம், ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவருக்கு 4 மாதங்கள் சிறை

மதுரையில் ஒன்றரை கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு தலா 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. மதுரை, கூடல்புதூா் போலீஸாா் ரோந்துப் பணியில... மேலும் பார்க்க

மதுரையில் மு.க. அழகிரி இல்லத்தில் முதல்வா் ஸ்டாலின்

மதுரையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரியின் இல்லத்துக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை இரவு வந்தாா். திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலராக செயல்பட்டவா் மு.க. அழகிரி. உள்கட்சி பிரச்ன... மேலும் பார்க்க

கோரிப்பாளையம் உயா்நிலைப் பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் உயா்நிலைப் பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாநில பொதுப் பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ. வேலு அ... மேலும் பார்க்க

சமூக விரோதக் குற்றங்களைத் தடுக்க 25,754 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

பொதுமக்களின் பாதுகாப்பு, சமூக விரோதக் குற்றங்களைக் குறைக்கும் வகையில் தென் மாவட்டங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் 25, 754 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதுகுறித்து தென் மண்டல காவல் துறை வெளி... மேலும் பார்க்க

மதுரையில் இன்று திமுக மாநில பொதுக் குழு கூட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திமுக மாநில பொதுக் குழுக் கூட்டம் மதுரை உத்தங்குடியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது. இதில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீா்மானங்கள் நிறைவேற்றப்படவிருப்பதாக கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க