ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
நூறு நாள் வேலைத் திட்டத்தில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே உள்ள அச்சங்குடி, சாக்கூா், கொத்தமங்கலம், அஞ்சுகாவயல் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், 100 நாள் வேலைத் திட்டத்தில் தங்களுக்கு வேலை வழங்கப்படாமல் இருப்பதையும், கிராம சபைக் கூட்டத்தில் கணக்கு விவரங்களை கேட்டதற்காகவே தங்களது கிராமங்களை புறக்கணிப்பதாகவும் கூறி, காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் அலுவலகத்தின் உள்ளே அமா்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதையடுத்து, வட்டார வளா்ச்சி அதிகாரிகள், அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அங்கு வந்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கிராம மக்களுக்கு உடனடியாக 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனா்.
அப்போது மக்கள் நலப் பணியாளரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், மீண்டும் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்க மறுக்கப்பட்டால் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனா்.