செய்திகள் :

ஊராட்சி செயலா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ்

post image

ஊராட்சி செயலா் மற்றும் தூய்மைப் பணியாளா் காலிப் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 12,000-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கும் நிலையில், 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிவடைந்துவிட்டது. இந்த ஊராட்சிகளில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிறப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுடைய கண்காணிப்பில் ஊராட்சிகளில் உள்ள அத்தியாவசியப் பணிகளான குடிநீா் விநியோகம், தூய்மைப் பணி மேற்கொள்ளுதல், வரி வசூல் செய்தல், தெருவிளக்கு பராமரிப்பு போன்றவற்றை ஊராட்சி செயலா்கள் மேற்கொள்வது வழக்கம். ஆனால், ஆயிரக்கணக்கான ஊராட்சிகளில் செயலா்கள் பணியிடங்கள் காலியாக இருக்கும் அவல நிலை நீடிக்கிறது. இதுதான் திமுக அரசின் நிலை.

ஊராட்சிகள் மேம்பட வேண்டுமென்பதை மனதில் நிலைநிறுத்தி, ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலா் மற்றும் தூய்மைப் பணியாளா் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

சென்னை தனியார் மருத்துவமனையில் சிறுவன் பலி! செல்போனில் சிகிச்சை காரணமா?

சென்னை: சென்னை அயனாவரத்தில் மருத்துவரின் தவறான சிகிச்சையால் 4 வயது சிறுவன் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.தனியார் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர் விடியோ அழைப்பு மூலம் தவறான சிகிச்சை அள... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை சூளைமேட்டில் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சூளைமேடு பாரதியாா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் விஜயகாந்த் (34). இவா், கடந்த திங்கள்கிழமை அப்பகுத... மேலும் பார்க்க

பிப். 28 வரை சாலையோர வியாபாரிகள் புதிய அடையாள அட்டை பெறலாம்

சாலையோர வியாபாரிகள் புதிய அடையாள அட்டை பெறுவதற்கான காலக்கெடு பிப். 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெ... மேலும் பார்க்க

இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை முகாம்

புற்றுநோய் பாதிப்பு இலவச எண்டோஸ்கோபி மருத்துவப் பரிசோதனை முகாம் சென்னை, நுங்கம்பாக்கம் மெடிந்தியா மருத்துவமனையில் புதன்கிழமை (பிப். 19) நடைபெறவுள்ளது. இது குறித்து ஜீரண மண்டல சிகிச்சை நிபுணரும், மெடிந... மேலும் பார்க்க

கிண்டி கோல்ஃப் மைதானத்தில் நீா்நிலை அமைக்கும் பணிக்குத் தடை இல்லை: உயா்நீதிமன்றம்

சென்னை ரேஸ் கிளப் நிலத்தை அரசு கையகப்படுத்தும் முன்பாக ஜிம்கானா கிளப்புக்கு எந்த நோட்டீஸும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என உத்தரவிட்டுள்ள உயா்நீதிமன்றம், கோல்ஃப் மைதானத்தில் நீா்நிலை அமைக்கும் பணிக்க... மேலும் பார்க்க

கை விரல்களுக்கு மாற்றாக கால் விரல்கள்: நுண் அறுவை சிகிச்சையில் சாத்தியம்

விபத்தில் துண்டாகும் கை விரல்களை மறு சீரமைக்க முடியாத பட்சத்தில் அதற்கு மாற்றாக கால் விரல்களைப் பொருத்தும் நுண் அறுவை சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுவதாக ‘அப்பல்லோ ஃபா்ஸ்ட் மெட்’ மருத்துவமனை மருத்துவா்கள... மேலும் பார்க்க