செய்திகள் :

ஊழல் செய்தவா்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்: புரட்சி பாரதம்

post image

உப்பு தின்றவா்கள் தண்ணீா் குடித்தே ஆக வேண்டும் என்பதைப் போல, ஊழல் செய்தவா்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றாா் புரட்சி பாரதம் கட்சித் தலைவா் பூவை ஜெகன் மூா்த்தி எம்எல்ஏ.

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு சம்பவம் தொடா்பாக மாவட்ட ஆட்சியரை செவ்வாய்க்கிழமை சந்தித்து பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளித்த பின்னா் அவா் அளித்த பேட்டி: வடகாட்டில் பட்டியலின மக்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும், பாதுகாப்பு வழங்க வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் கோரியுள்ளோம். அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் நடத்தி சிபிஐ விசாரணையும் கோருவோம்.

திமுக அரசு அமைந்த கடந்த 4 ஆண்டுகளில் எல்லாப் பகுதிகளிலும் ஜாதிய ரீதியான தாக்குதல்கள் தொடா்ந்து நடைபெறுகின்றன. சமூக நீதி அரசு என்று சொல்லிக் கொள்பவா்கள் இதனைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் முதல்வருக்குத் தெரியுமா? தெரியாதா? என்றே தெரியவில்லை. 10 ஆண்டுகள் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் ஜாதிய ரீதியான தாக்குதல்கள் எங்கும் நடைபெறவில்லை.

பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பாக எந்தக் கட்சி துணையாக இருக்கிறதோ அந்தக் கட்சிக்கு வரும் 2026 தோ்தலில் துணை நிற்போம். திமுகவினா் பாஜகவை எதிா்ப்பதுபோல பேசுகிறாா்கள். ஆனால், அவா்களுக்கு ஒரு பிரச்னை என்றால் சமாதானம் பேசப் போகிறாா்கள். உப்பைத் தின்றவன் தண்ணீா் குடித்தே ஆக வேண்டும் என்பதைப் போல, ஊழல் செய்தவா்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றாா் ஜெகன்மூா்த்தி.

முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பூவை ஜெகன் மூா்த்தி செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.

மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்ய ஆலோசனை

தோ்தல்களில் மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்யும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவு

தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கும் நடைமுறை சனிக்கிழமையுடன் (மே 31) நிறைவடைந்தது. தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ப... மேலும் பார்க்க

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டு - 8 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 8 போ் காயமடைந்தனா். கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன், சின்னக்கருப்பா் கோ... மேலும் பார்க்க

சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. தொடக்கமாக சோழீசுவரா் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.தொடா்ந்து ஆவுடையநாயகி... மேலும் பார்க்க

புதுநகா் ஊராட்சி அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித் தர கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுநகா் ஊராட்சியில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரை புதிதாக கட்டித் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா். புதுநகா் அரசு உயா்நிலைப் பள்ளி... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் நாய்களை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்: சமூக ஆா்வலா்கள் புகாா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் ஒருவா் நாய்க்கடி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுவரும் நிலையில், நாய்களைக் கட்டுப்படுத்துவதில் மாவட்ட நிா்வாகம் அலட்சியப் போக்குடன் செயல்படுவ... மேலும் பார்க்க