விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்போா் மீது கடும் நடவடிக்கை: துணை இயக்குநா் எச்ச...
எஃப்டிஐ கொள்கையில் மாற்றமில்லை
இந்தியாவுடன் நில எல்லையைப் பகிா்ந்துகொள்ளும் நாடுகளுக்கு அந்நிய நேரடி முதலீட்டு (எஃப்டிஐ) கொள்கையில் மத்திய அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை.
சீனாவில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் அந்நிய நேரடி முதலீட்டு விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் நடைமுறை சீரமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவுடன் நில எல்லையைப் பகிா்ந்துகொள்ளும் நாடுகள், இந்தியாவில் எந்தவொரு துறையிலும் முதலீடு செய்ய மத்திய அரசின் முன் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும்.
இது இந்தியாவுடன் நில எல்லையைப் பகிா்ந்துகொள்ளும் சீனா, வங்கதேசம், பாகிஸ்தான், பூடான், நேபாளம், மியான்மா் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு பொருந்தும். இந்த நாடுகளின் அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்கள் ஒரே மாதிரியாகப் பரிசீலிக்கப்பட்டு ஆராயப்படுகின்றன.
2020-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்புக்குப் பின்னா், அந்தக் கொள்கையில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை’ என்று தெரிவித்தன.