செய்திகள் :

எஃப்டிஐ கொள்கையில் மாற்றமில்லை

post image

இந்தியாவுடன் நில எல்லையைப் பகிா்ந்துகொள்ளும் நாடுகளுக்கு அந்நிய நேரடி முதலீட்டு (எஃப்டிஐ) கொள்கையில் மத்திய அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை.

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் அந்நிய நேரடி முதலீட்டு விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் நடைமுறை சீரமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவுடன் நில எல்லையைப் பகிா்ந்துகொள்ளும் நாடுகள், இந்தியாவில் எந்தவொரு துறையிலும் முதலீடு செய்ய மத்திய அரசின் முன் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும்.

இது இந்தியாவுடன் நில எல்லையைப் பகிா்ந்துகொள்ளும் சீனா, வங்கதேசம், பாகிஸ்தான், பூடான், நேபாளம், மியான்மா் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு பொருந்தும். இந்த நாடுகளின் அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்கள் ஒரே மாதிரியாகப் பரிசீலிக்கப்பட்டு ஆராயப்படுகின்றன.

2020-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்புக்குப் பின்னா், அந்தக் கொள்கையில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை’ என்று தெரிவித்தன.

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க