செய்திகள் :

'எடப்பாடி எடுப்பதே எங்கள் முடிவு'- செங்கோட்டையன் பேசியது குறித்து திண்டுக்கல் சீனிவாசன்

post image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் இன்று (செப்டம்பர் 5) மனம் திறந்து பேசப்போவதாக அறிவித்திருந்தார்.

அதேபோல், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய செங்கோட்டையன், “கட்சியில் இருந்து வெளியேறிவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தால்தான் அதிமுக வெற்றி பெற முடியும்.

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு
செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

'மறப்போம் மன்னிப்போம்' என்ற அடிப்படையில் கட்சியைவிட்டு வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும். அதிமுக ஒருங்கிணைப்பு என்பது இந்த நேரத்தில் முக்கியம். அதுதான் அதிமுக தொண்டர்களின் விருப்பம். விரைந்து இதைச் செய்ய வேண்டும்.

10 நாள்களில் பிரிந்தவர்களை மீண்டும் சேர்த்து அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும். அதிமுக ஒருங்கிணைந்தால்தான் நான் முழுமையாக இறங்கி வெற்றிக்காகப் பணியாற்றுவேன்.

இது நடந்தால்தான் சுற்றுப்பயணம், தேர்தல் பணிகளில் இறங்கி பணியாற்றுவேன்,” என்று பேசியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது செங்கோட்டையன் பேசியது குறித்து திண்டுக்கல் சீனிவாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், " செங்கோட்டையன் அவரது முடிவை சொல்லி இருக்கிறார். ஆனால் பொதுச்செயலாளர் எடப்பாடி எடுப்பதே எங்கள் முடிவு” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"எடப்பாடி பழனிசாமி விவரமானவர், இந்நேரம் முடிவு எடுத்திருப்பார்" - சர்டிபிகேட் கொடுத்த எ.வ.வேலு

"அதிமுகவில் பெரிய சலசலப்பு ஒன்றுமில்லை, நண்பர் எடப்பாடி பழனிசாமி விவரமானவர், இந்நேரம் முடிவு எடுத்திருப்பார்" என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு பாராட்டும் வகையில் பேசியுள்ளார். எ.வ. வேலுமதுரையில... மேலும் பார்க்க

``செங்கோட்டையனுக்கு உரிமை இல்லை; அவருக்குப் பின்னால் இருப்பவர் இவர்தான்'' - தளவாய் சுந்தரம் ஓபன்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக வெளிப்படையாகவே பனிப்போர் நடந்து வந்தது.இவ்வாறான சூழலில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 5)... மேலும் பார்க்க

``நயினாரின் செயல் வருத்தத்தைக் கொடுத்தது; அதிமுக-வே போதும் என நினைத்தால்'' - TTV தினகரன் பளீச்

தமிழ்நாட்டில் தற்போது அரசியல் களத்தில் அ.தி.மு.க – பா.ஜ.க இணைந்த என்.டி.ஏ கூட்டணியில் நடைபெறும் சம்பவங்கள் பேசுபொருளாக உள்ளன.முதலில், கூட்டணியிலிருந்து ஓ.பி.எஸ் வெளியேறினார். அதையடுத்து, அ.தி.மு.க-வில... மேலும் பார்க்க

செங்கோட்டையனைத் தொடர்ந்து சத்தியபாமாவின் பதவி பறிப்பு - எடப்பாடியின் அடுத்த அதிரடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் த... மேலும் பார்க்க

``ராஜினாமா செய்யப் போகிறேன், நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்'' - செங்கோட்டையன் ஆதரவாளர் சத்யபாமா

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் த... மேலும் பார்க்க