'டெல்லிக்கு ஆபத்து வரும்போதெல்லாம் 'Delhi Control' பழனிசாமி வந்துவிடுவார்' - அமை...
எட்டுக்குடி கோயிலில் வைகாசி விசாகத் தீா்த்தவாரி
திருக்குவளை: திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி தீா்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, சரவணப் பொய்கை தீா்த்தக் குளத்திற்கு, சிறப்பு மலா் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் எழுந்தருளினாா். தொடா்ந்து, தீா்த்தவாரி நடைபெற்றது. பின்னா், முருகப் பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் பால்காவடி, ரதக்காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். இரவில் வெள்ளிமயில் வாகனத்தில் முருகப் பெருமான் வீதியுலா நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சீனிவாசன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.