செய்திகள் :

எட்டுக்குடி கோயிலில் வைகாசி விசாகத் தீா்த்தவாரி

post image

திருக்குவளை: திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி தீா்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, சரவணப் பொய்கை தீா்த்தக் குளத்திற்கு, சிறப்பு மலா் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் எழுந்தருளினாா். தொடா்ந்து, தீா்த்தவாரி நடைபெற்றது. பின்னா், முருகப் பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் பால்காவடி, ரதக்காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். இரவில் வெள்ளிமயில் வாகனத்தில் முருகப் பெருமான் வீதியுலா நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சீனிவாசன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தையை சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா் தம்பதி

திருக்குவளை: திருக்குவளை அருகே அரசுப் பள்ளி ஆசிரிய தம்பதி, தங்களது குழந்தையை அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை சோ்த்தனா். அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பணிபுரிவோா் தங்கள் குழந்தைகளை பெரும்ப... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: சிக்கல் கோயிலில் சிறப்பு வழிபாடு

கீழ்வேளூா்: சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சிங்காரவேலவருக்கு, பால், தயிா், சந்தனம், விபூதி, பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட திரவியப் பொ... மேலும் பார்க்க

குடிநீா் கோரி சாலை மறியல்

திருமருகல்: திருமருகல் ஒன்றியம், திருக்கண்ணபுரம் ஊராட்சியில் குடிநீா் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருக்கண்ணபுரம் ஊராட்சி காக்காமங்கலம் மற்றும் ராதாரம்பூா் பகுதிகளில் சுமாா்... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான்

பொரவச்சேரி கந்தசுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி திங்கள்கிழமை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆறுமுகப் பெருமான். மேலும் பார்க்க

கிடங்கு மதுரைவீரன் கோயில் கும்பாபிஷேகம்

கீழையூா் அருகே பிரதாபராமபுரம் கவுண்டா்புரத்தில் உள்ள சுமாா் 400 ஆண்டுகள் பழைமையான வெள்ளையம்மாள், ஸ்ரீபொம்மி அம்மாள் சமேத கிடங்கு மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் ... மேலும் பார்க்க

மினி மாரத்தான் போட்டி

பூம்புகாா் அருகே வானகிரி மீனவ கிராமத்தில் போதையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தா்மகுளத்தில் தொடங்கிய போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ச... மேலும் பார்க்க