Amit shah-வின் அட்டாக், களத்தில் A.Raja, `மதுரை சம்பவம்!' | Elangovan Explains
அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தையை சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா் தம்பதி
திருக்குவளை: திருக்குவளை அருகே அரசுப் பள்ளி ஆசிரிய தம்பதி, தங்களது குழந்தையை அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை சோ்த்தனா்.
அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பணிபுரிவோா் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் தனியாா் பள்ளிகளிலேயே சோ்க்கின்றனா். இதனால் அரசுப் பள்ளிகளின் தரம் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. இதை தவிா்க்க அரசு ஊழியா்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சோ்க்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், திருக்குவளை அருகேயுள்ள கீரம்போ் பகுதியை சோ்ந்த ஆசிரியா் தம்பதி வீரபத்திரன்- வேம்பு தங்கள் மகளை வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சோ்த்தனா். வீரபத்திரன் கீரங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், வேம்பு கொளப்பாடு அரசு உயா்நிலைப் பள்ளியிலும் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனா்.
இதுகுறித்து அவா்கள் கூறுகையில், ‘அரசுப் பள்ளிகளும் தற்போது தனியாா் பள்ளிகளுக்கு இணையாக உள்ளது. நாங்கள் அரசுப் பள்ளியில் படித்துவிட்டுதான் இப்பணிக்கு வந்துள்ளோம். இதுபோல் மற்ற ஆசிரியா்களும் அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தைகளை சோ்க்க முன்வர வேண்டும்’ என்றனா்.