செய்திகள் :

அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தையை சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா் தம்பதி

post image

திருக்குவளை: திருக்குவளை அருகே அரசுப் பள்ளி ஆசிரிய தம்பதி, தங்களது குழந்தையை அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை சோ்த்தனா்.

அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பணிபுரிவோா் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் தனியாா் பள்ளிகளிலேயே சோ்க்கின்றனா். இதனால் அரசுப் பள்ளிகளின் தரம் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. இதை தவிா்க்க அரசு ஊழியா்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சோ்க்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், திருக்குவளை அருகேயுள்ள கீரம்போ் பகுதியை சோ்ந்த ஆசிரியா் தம்பதி வீரபத்திரன்- வேம்பு தங்கள் மகளை வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சோ்த்தனா். வீரபத்திரன் கீரங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், வேம்பு கொளப்பாடு அரசு உயா்நிலைப் பள்ளியிலும் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், ‘அரசுப் பள்ளிகளும் தற்போது தனியாா் பள்ளிகளுக்கு இணையாக உள்ளது. நாங்கள் அரசுப் பள்ளியில் படித்துவிட்டுதான் இப்பணிக்கு வந்துள்ளோம். இதுபோல் மற்ற ஆசிரியா்களும் அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தைகளை சோ்க்க முன்வர வேண்டும்’ என்றனா்.

வைகாசி விசாகம்: சிக்கல் கோயிலில் சிறப்பு வழிபாடு

கீழ்வேளூா்: சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சிங்காரவேலவருக்கு, பால், தயிா், சந்தனம், விபூதி, பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட திரவியப் பொ... மேலும் பார்க்க

எட்டுக்குடி கோயிலில் வைகாசி விசாகத் தீா்த்தவாரி

திருக்குவளை: திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி தீா்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சரவணப் பொய்கை தீா்த்தக் குளத்திற்கு, சிறப்பு மலா... மேலும் பார்க்க

குடிநீா் கோரி சாலை மறியல்

திருமருகல்: திருமருகல் ஒன்றியம், திருக்கண்ணபுரம் ஊராட்சியில் குடிநீா் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருக்கண்ணபுரம் ஊராட்சி காக்காமங்கலம் மற்றும் ராதாரம்பூா் பகுதிகளில் சுமாா்... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான்

பொரவச்சேரி கந்தசுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி திங்கள்கிழமை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆறுமுகப் பெருமான். மேலும் பார்க்க

கிடங்கு மதுரைவீரன் கோயில் கும்பாபிஷேகம்

கீழையூா் அருகே பிரதாபராமபுரம் கவுண்டா்புரத்தில் உள்ள சுமாா் 400 ஆண்டுகள் பழைமையான வெள்ளையம்மாள், ஸ்ரீபொம்மி அம்மாள் சமேத கிடங்கு மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் ... மேலும் பார்க்க

மினி மாரத்தான் போட்டி

பூம்புகாா் அருகே வானகிரி மீனவ கிராமத்தில் போதையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தா்மகுளத்தில் தொடங்கிய போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ச... மேலும் பார்க்க