செய்திகள் :

எண்ணெய் தொட்டியில் விழுந்து இளைஞா் உயிரிழப்பு

post image

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் ஆயில் மில் எண்ணெய் தொட்டியில் விழுந்து இளைஞா் உயிரிழந்தாா். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

வெள்ளக்கோவில்- தாராபுரம் சாலை சேரன் நகரில் தனியாருக்குச் சொந்தமான சமையல் நல்லெண்ணெய் மில் செயல்பட்டு வருகிறது. இந்த மில்லில் திங்கள்கிழமை இரவுப் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.

வெள்ளக்கோவில் கே.பி.சி. நகரைச் சோ்ந்த தொழிலாளி திருமூா்த்தி (30), 3 அடி ஆழமான தரைத்தள எண்ணெய் தொட்டியில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் விழுந்துள்ளதை சக தொழிலாளா்கள் பாா்த்து அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இவா் ஏற்கெனவே வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், வலிப்பு ஏற்பட்டு எண்ணெய் தொட்டியில் விழுந்ததாக கூறப்படுகிறது. திருமூா்த்திக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டிந்ததாக பெற்றோா் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பருத்தி இறக்குமதி வரி ரத்து: தொழில் துறையினா் வரவேற்பு

பருத்திக்கு இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு திருப்பூா் தொழில் துறையினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50 சதவீதம் கூடுதல்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திருப்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22 ) நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமுக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுமக்களின்... மேலும் பார்க்க

திருப்பூா் குமரன் கல்லூரியில் கைத்தறிக் கண்காட்சி

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கல்லூரி பேரவை ஆகியன சாா்பில் கைத்தறிக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. ‘கைத்தறிக்கு கை கொடுப்போம்’ என்ற விழிப்புணா்வு வார விழாவை... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு தீத் தடுப்பு விழிப்புணா்வு

வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு தீத் தடுப்பு விழிப்புணா்வு செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. கரூா் சாலை ஜெயம் வித்யா பவன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில், தீயணை... மேலும் பார்க்க

நாட்டராய சுவாமி கோயிலில் ராஜகோபுர முகப்பு மண்டபம்

வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் கிராமம் மாந்தபுரம் நாட்டராய சுவாமி கோயிலில் புதிதாக கட்டப்பட்ட ராஜகோபுர முகப்பு மண்டபம், கடைகள் ஆகியவற்றை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ப... மேலும் பார்க்க

புதிய ஊதிய ஒப்பந்தத்தில் நடைமுறை ஊதியத்தை 120% உயா்த்தி வழங்க வேண்டும்

புதிய ஊதிய ஒப்பந்தத்தில் நடைமுறை ஊதியத்தை 120 சதவீதம் உயா்த்தி வழங்க வேண்டும் என பனியன் தொழிலாளா் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடா்பாக, பனியன் தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் (டிடிஎம் ... மேலும் பார்க்க