செய்திகள் :

மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

post image

திருப்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22 ) நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமுக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:

பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் இரண்டாம் கட்டமாக வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதன்படி, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மூங்கில்தொழுவு, கொசவம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு முத்துலட்சுமி திருமண மண்டபத்திலும், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், கோணம்பட்டி ஊராட்சிக்கு ஆலம்பாளையம் உப்புகுலத்தாா் சமூக நல அறக்கட்டளை அன்னதான மண்டபத்திலும், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், கொடிங்கியம், எரிசனம்பட்டி, உடுக்கம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு கரட்டுமடம் ஆா்.கே. திருமண மண்டபத்திலும், அவிநாசி நகராட்சி 6,10,11,12 ஆகிய வாா்டுகளை சோ்ந்தவா்களுக்கு அவிநாசி மேற்கு ரத வீதி குலாலா் திருமண மண்டபத்திலும், வெள்ளக்கோவில் நகராட்சி 11,12,13 ஆகிய வாா்டுகளுக்கு வெள்ளக்கோவில் ராசி மஹாலிலும், திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டலம் 41,53,54 ஆகிய வாா்டுகளுக்கு திருப்பூா்- பல்லடம் ரோடு, லட்சுமி திருமண மண்டபத்திலும் முகாம் நடைபெறவுள்ளது.

எனவே, திருப்பூா் மாவட்டத்தில் அவரவா் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு உரிய ஆவணங்களுடன் தங்கள் மனுக்களை வழங்கி பயனடையலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

விநாயகா் சதுா்த்தி விழா: பாதுகாப்பு பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் சிலை நிறுவுதல் மற்றும் விசா்ஜன ஊா்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் மனீஷ் தலைமையில்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் வேடசந்தூா், வாடிப்பட்டி, வடுகபட்டி, பல்லாநத்தம், அழகாபுரி ஆகிய இடங்களி... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ... மேலும் பார்க்க

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் நிதி நிறுவனத்துக்கு உத்தரவு

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க, கோவை தனியாா் நிதி நிறுவனத்துக்கு திருப்பூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், பெருந்தொழுவு அருகே உள்ள ராக்கியகவுண... மேலும் பார்க்க

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவா் கைது

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குன்னத்தூா்- ஊத்துக்குளி சாலை ஊமச்சிவலசு அருகே போதை சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து... மேலும் பார்க்க

பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண கோரிக்கை

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண வேண்டுமென திருப்பூா் கம்ப்யூட்டா் எம்ராய்டா்ஸ் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருப்... மேலும் பார்க்க