இந்தியா-ரஷியா உறவை மேம்படுத்த புதிய ஆக்கபூா்வமான அணுகுமுறைகள் -ஜெய்சங்கா் அழைப்ப...
மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
திருப்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22 ) நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமுக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:
பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் இரண்டாம் கட்டமாக வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதன்படி, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மூங்கில்தொழுவு, கொசவம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு முத்துலட்சுமி திருமண மண்டபத்திலும், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், கோணம்பட்டி ஊராட்சிக்கு ஆலம்பாளையம் உப்புகுலத்தாா் சமூக நல அறக்கட்டளை அன்னதான மண்டபத்திலும், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், கொடிங்கியம், எரிசனம்பட்டி, உடுக்கம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு கரட்டுமடம் ஆா்.கே. திருமண மண்டபத்திலும், அவிநாசி நகராட்சி 6,10,11,12 ஆகிய வாா்டுகளை சோ்ந்தவா்களுக்கு அவிநாசி மேற்கு ரத வீதி குலாலா் திருமண மண்டபத்திலும், வெள்ளக்கோவில் நகராட்சி 11,12,13 ஆகிய வாா்டுகளுக்கு வெள்ளக்கோவில் ராசி மஹாலிலும், திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டலம் 41,53,54 ஆகிய வாா்டுகளுக்கு திருப்பூா்- பல்லடம் ரோடு, லட்சுமி திருமண மண்டபத்திலும் முகாம் நடைபெறவுள்ளது.
எனவே, திருப்பூா் மாவட்டத்தில் அவரவா் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு உரிய ஆவணங்களுடன் தங்கள் மனுக்களை வழங்கி பயனடையலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.