செய்திகள் :

எதிர்க்கட்சி முதல்வர்கள் மக்களை திசைதிருப்பலாமா? -தமிழிசை சௌந்தரராஜன்

post image

சென்னை: சென்னையில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை(மார்ச் 22) நடைபெற்ற ’நியாயமான தொகுதி மறுசீரமைப்பு’ குறித்து விவாதிக்க உருவாக்கப்பட்டுள்ள கூட்டுக்குழுவின் முதலாவது ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு மாநில தலைவர்களும் கலந்துகொண்டனர்.

தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அடுத்தக்கட்டமாக, கூட்டுக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ’நியாயமான தொகுதி மறுசீரமைப்பு’ குறித்த ஆலோசனைக் கூட்டமானது மக்களை திசைதிருப்பும் முயற்சி என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: “தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்பது தேர்தல் ஆணையத்தின் இணையதளப் பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது, எதற்காக அவர்கள் ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்?

அவர்கள்(திமுக) தமிழ்நாட்டு மக்களை திசைதிருப்புகிறார்கள். இங்கு(சென்னை) வருகை தந்திருந்த பிற முதல்வர்களும் தாங்கள் சார்ந்துள்ள மாநில மக்களை திசைதிருப்புகிறார்கள்.

அதேபோல, புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள தேசிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை நாங்கள்(பாஜக) எடுத்துச்சொல்ல விழைகிறோம்.இந்த விவகாரத்தில் அவர்கள் தமிழ்நாட்டு மக்களை திசைதிருப்புகிறார்கள்.

தேசிய கல்விக் கொள்கையில், மும்மொழி கொள்கை என்பது மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது (ஹிந்தி என்று குறிப்பிடப்படவில்லை).

ஆகவே, மக்களிடம் திமுகவால் எழுப்பப்பட்டுள்ள ஐயங்களைக் களைய நாங்கள் விழைகிறோம்” என்றார்.

தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த பிரதமரிடம் கார்த்தி சிதம்பரம் மனு!

இந்தியாவில் தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து, ந... மேலும் பார்க்க

குணால் காம்ராவுக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்த வழக்கில் குணால் காம்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த விவகாரத்தில் குணால் காம்ரா மனுத் தாக்கல் செய்திருந்தார். அத... மேலும் பார்க்க

ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய வாட்ஸ் ஆப் குழு!

ரயில்களில் பெண்களின்பாதுகாப்புக்காக புதிய வாட்ஸ் ஆப் குழுவை ரயில்வே காவல்துறையினர் அறிமுகம் செய்தனர்.ரயில்களில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் ரயிலில் பயணம்... மேலும் பார்க்க

நேற்று வந்தவன்! முதல்வர், பிரதமர் பெயர்களைச் சொன்ன தவெக தலைவர் விஜய்!

சென்னை: மிக வித்தியாசமான சட்டப்பேரவைத் தேர்தலை தமிழ்நாடு சந்திக்கும். இந்த தேர்தலில் போட்டியே திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் என்று தமிழக வெற்றிக் கழக பொதுக் குழுவில் கட்சித் தலைவர் விஜய் கூறினார்.திரு... மேலும் பார்க்க

கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறப்பு!

கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. சென்னை பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், தமிழக எல்லையான ஊத்து... மேலும் பார்க்க

தவெக - திமுக இடையில்தான் போட்டி: பொதுக்கூட்டத்தில் வெளிவந்த லியோ!

அடுத்தாண்டு தேர்தலில் திமுகவுடன் மட்டுமே போட்டி என்று கட்சி பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கூறினார்.சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது பொதுக... மேலும் பார்க்க