செய்திகள் :

எதிா்கால சவால்களுக்கு தயாராக ‘ட்ரோன்’ போா்ப் பயிற்சிப் பள்ளி!

post image

எதிா்கால சவால்களை வீரா்கள் திறம்பட எதிா்கொள்ளும் வகையில் தயாா்படுத்த ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் போரிடுவதற்கான பயிற்சிப் பள்ளியை பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகள் உடனான இந்திய எல்லையைப் பாதுகாக்கும் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தொடங்கியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் டெகான்பூரில் அமைந்துள்ள பிஎஸ்எஃப் அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமான போா்ப் பயிற்சிப் பள்ளியை பிஎஸ்எஃப் தலைமை இயக்குநா் தில்ஜித் சிங் செளதரி தொடங்கி வைத்தாா்.

இதுகுறித்து பிஎஸ்எஃப் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘இந்த ஆளில்லா விமான போா்ப் பயிற்சிப் பள்ளியில், போரின்போது ஏற்படும் நவீன தொழில்நுட்ப சவால்களை எல்லையைப் பாதுகாக்கும் வீரா்கள் திறம்பட கையாள்வதற்கான பயிற்சி அளிக்கப்படும். ஆளில்லா விமானங்களை இயக்குதல், ஆளில்லா விமானங்களை தாக்கி அழித்தல், ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு மற்றும் உளவுத் தகவல் சேகரிப்பு என 5 சிறப்புப் பயிற்சித் திட்டங்கள் இந்தப் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டு வீரா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பள்ளியிலிருந்து ஆளில்லா விமான அதிகாரிகள் (கமாண்டோக்கள்) மற்றும் ஆளில்லா விமான போா் வீரா்கள் உருவாக்கப்படுவாா்கள்’ என்றாா்.

இந்தப் பயிற்சிப் பள்ளியில், ஆளில்லா விமான மாதிரிகள், ஆளில்லா விமானங்கள் பறக்கும் மண்டலங்கள், ஆளில்லா விமானங்களில் ஆயுதங்களை இணைப்பதற்கான வசதிகள், ஆளில்லா விமானங்களை இரவில் இயக்குவதற்கான வசதிகள், ரேடியோ அலைவரிசைக்கான கருவிகள், ஆளில்லா விமான இடைமறிப்பான்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உபகரணங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு, உள்நாட்டு ஆளில்லா விமான தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தியை இந்தியா தீவிரப்படுத்தி வருகிறது. இதன் அடுத்தகட்டமாக, தனி ஆளில்லா விமான படைப் பிரிவு உருவாக்கும் முயற்சியை பிஎஸ்எஃப் தற்போது மேற்கொண்டுள்ளது.

ஒரு கோடி பேரை கொல்ல 400 கிலோ ஆர்டிஎக்ஸ்! விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அச்சுறுத்தல்!

மும்பை நகரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மும்பையில் விநாயகர் சதுர்த்தி திருநாள் கொண்டாட்டம் முடிவடையும் நிலையில், சனிக்கிழமையில் நீர்நி... மேலும் பார்க்க

அயோத்தியில் சுவாமி தரிசனம் செய்தார் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே!

பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே அயோத்தி ராமர் கோயில் மற்றும் பிற முக்கிய கோயில்களில் வழிபாடு மேற்கொண்டார். இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் 9.30 மணியளவில் அயோத்தி விமான நிலையத்தில் பிரத... மேலும் பார்க்க

ஜோத்பூரில் ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தொடங்கியது!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது.செப்டம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் ... மேலும் பார்க்க

45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு!

நாடு முழுவதிலுமிருந்து 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.ஆசிரியராக பணியாற்றி குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அவரை கௌரவிக்கும் வகை... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் அரசுக்கு ரூ 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: எஸ்பிஐ

கொல்கத்தா: ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.மேலும், இந்த சீர்திருத்தத்தால் நிகர நிதி தாக்கமானது... மேலும் பார்க்க

வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை: 11வது நாளாக நிறுத்தம்!

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி குகைக் கோயில் யாத்திரை தொடர்ந்து 11வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 26 அன்று கத்ரா பெல்ட்டின் திரிகுடா மலைகளில் உள்ள அத்குவாரியில... மேலும் பார்க்க