செய்திகள் :

`எத்தனை மோடி, இரவிகள் வந்தாலும்... மக்களின் மொழி உணர்வை வீழ்த்த முடியாது!' - சு.வெங்கடேசன் காட்டம்

post image
தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது என்று ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், எம்.பி வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

``தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருவாரியான உள்ளூர் தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் ஆளுநர் ஆர். என் ரவி கலந்துரையாடி இருக்கிறார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கையால் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கின்றனர்.

சு. வெங்கடேசன்
சு. வெங்கடேசன்

ஹிந்தியை எதிர்க்கிறோம் என எந்த தென்மாநில மொழிகளையும் கூட, படிக்க இளைஞர்கள் அனுமதிக்கப்படவில்லை. தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது" என்று தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது“ என்று ஆளுநர் கூறியிருக்கிறார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எம்.பி வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், "மாநில மொழிகளை அழிக்கவும், அதிகாரத்தை பறிக்கவும் இந்துத்துவா கும்பலுக்கு அந்த தேவையுள்ளது. அதனை எதிர்த்து எங்களின் மொழியையும், உரிமையையும் காப்பாற்ற வேண்டியத் தேவை எங்களுக்கு உள்ளது. இந்த போரில் எத்தனை மோடிக்கள் வந்தாலும், எத்தனை இரவிகள் வந்தாலும் மக்களின் மொழி உணர்வை ஒரு போதும் வீழ்த்த முடியாது" என்று தெரிவித்திருக்கிறார்.

USA - Ukraine : 'ஜெலன்ஸ்கி vs ட்ரம்ப்' - 10 நிமிடத்தில் பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாற 4 காரணங்கள்!

பேச்சுவார்த்தைஉக்ரைனின் கனிமவளங்களை அமெரிக்கா எடுத்துக்கொள்ளும்படியான ஒரு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகவிருந்தது. இதற்காக அமெரிக்கா சென்றார் ஜெலன்ஸ்கி. நேற்று அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்,... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுக்கு கேக் ஊட்டிய துரைமுருகன், உதயநிதி - அண்ணா அறிவாலயத்தில் பிறந்தநாள் விழா

முதல்வர் ஸ்டாலினுக்கு கேக் ஊட்டிய துரைமுருகன், உதயநிதி - அண்ணா அறிவாலயத்தில் பிறந்தநாள் விழா மேலும் பார்க்க

Zelensky: 'ட்ரம்ப் எப்படி ஜெலன்ஸ்கியை அடிக்காமல் விட்டார்?' - USA Vs Ukraine-ல் ரஷ்யா ரியாக்‌ஷன்

நேற்று நடந்த ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கியின் சந்திப்பு, வார்த்தைப் போராக முற்றி படுதோல்வியில் முடிந்துள்ளது. இந்த சந்திப்பில் கனிம ஒப்பந்தம் கையெழுத்தாவதுடன், ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து நல்ல முடிவுகள... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: `தமிழ்நாட்டின் குரல்வளை முழுமையாக நசுக்கப்படும்' - எதிர்ப்பு கிளப்புவது ஏன்?

எதிர்க்கும் தென் இந்தியாதொகுதி மறுசீரமைப்பு மத்திய பா.ஜ.க அரசு பதவியேற்றது முதல் தொகுதி மறுசீரமைப்பு, `ஒரே நாடு, ஒரே தேர்தல்' நடைமுறையை கொண்டுவர தீவிரம் காட்டி வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்... மேலும் பார்க்க

USA -Ukraine: `சத்தமாக பேசுவதை நிறுத்துங்கள்' - வாக்குவாதத்தில் முடிந்த சந்திப்பு- என்ன நடந்தது?

ஒப்பந்தத்தில் கையெழுத்திட...உக்ரைன் போருக்கு அமெரிக்கா செலவு செய்வதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்பவில்லை. மேலும், உக்ரைன் அதிபர் போர் என்ற பெயரை காரணம் காட்டி ஆட்சியில் நீடிக்கிறார் என்றும், அவருக்க... மேலும் பார்க்க

Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' - உணர்ச்சி வசப்பட்ட சீமான்!

நடிகை கொடுத்த பாலியல் புகாரில் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விசாரணையை முடித்துவிட்டு நள்ளிரவில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். பத்திரிகையாளர்... மேலும் பார்க்க