செய்திகள் :

'எனக்கு பிடிக்கவில்லை; நிறுத்துங்கள்' - புதின் மீது கோபப்படும் ட்ரம்ப் - பின்னணி என்ன?

post image

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நீ......ண்டுகொண்டே போகின்றது.

ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையில் பிடி கொடுக்க மறுக்கிறது. 'நாங்கள் மத்தியஸ்த்தில் இருந்து விலகிவிடுவோம்' என்று அமெரிக்கா பயமுறுத்தி பார்த்தும் எந்த பலனும் இல்லை.

சமீபத்தில் லண்டனில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில், அமெரிக்கா முன்வைத்த அம்சங்களை மறுத்து முறுக்கிக்கொண்டது உக்ரைன்.

ஜெலன்ஸ்கி, ட்ரம்ப், புதின்
ஜெலன்ஸ்கி, ட்ரம்ப், புதின்

ரஷ்யாவின் பக்கம் அமெரிக்கா

உக்ரைனின் இந்தக் கோபத்திற்கு காரணம், அமெரிக்கா முன்வைத்த அம்சங்களில் மிக முக்கியமான இரண்டு - முன்னர் ரஷ்யாவிடம் இருந்த கிரிமியா ரஷ்யாவின் பிரதேசமாகவே தொடரும் மற்றும் உக்ரைன் நோட்டோவில் சேர முடியாது என்பதாகும்.

இந்த இரண்டுமே ரஷ்யாவிற்கு சாதகமானவை. இது தான் உக்ரைனின் பெரும் கோபத்திற்கு காரணம்.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அவர் பேசிவரும் பெரும்பாலானவை ரஷ்யாவின் பக்கமே இருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், ரஷ்ய அதிபர் புதினும் நட்புடன் தான் உள்ளனர் எனபது உலகறிந்த விஷயம்.

ட்ரம்ப்பின் கடுமையான பதிவு

இந்த நிலையில், ட்ரம்ப் புதினை கடுமையாக விமர்ச்சிக்கும் விதமாக தனது ட்ரூத் பக்கத்தில் நேற்று பதிவிட்டுள்ளார். அது...

"கீவ் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் எனக்கு பிடிக்கவில்லை. இது தேவையில்லாதது மற்றும் மிக தவறான நேரம் இது. நிறுத்துங்கள்! ஒவ்வொரு வாரமும் 5,000 வீரர்கள் இறக்கிறார்கள். அமைதி ஒப்பந்தத்தை முடிப்போம்".

பின்னணி என்ன?

லண்டனில் அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் ஒப்புக்கொள்ளாததையடுத்து, உக்ரைனின் தலைநகரமான கீவ் மீதும், இன்னொரு நகரமான கார்கிவ் மீதும் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி உயிரிழப்புகள் மற்றும் பலருக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

`சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் விடுவிப்பும் ரத்து' - உயர் நீதிமன்றம் அதிரடி

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.கடந்த 1996 ... மேலும் பார்க்க

`துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியுள்ளது’ - குற்றச்சாட்டும் ஆளுநர் ரவி

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஊட்டி ராஜ்பவனில் துணை வேந்தர்களுக்கான மாநாடு நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடைபெறும் 2 நாள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் ... மேலும் பார்க்க

'பஹல்காமில் எப்படி பாதுகாப்பு குறைபாடானது?' - அனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர்கள் பேசியதென்ன?

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக ஆலோசிக்க நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.'அனைவரும் ஒப்புக்கொண்டனர்' - கிரண் ரிஜிஜு இந்த ஆலோசனை கூட்டம் தொடர்பாக பாஜக-வின் கிரண் ரிஜிஜூ செய்தியாளர்களிடம்... மேலும் பார்க்க

Pahalgam : 'இந்தியாவாக இருந்தாலும், இஸ்ரேலாக இருந்தாலும்..!' - நியூயார்க் டைம்ஸை சாடிய அமெரிக்க அரசு

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் இந்திய அளவில் மட்டுமல்ல... உலக அரங்கிலும் மிகவும் அதிர்ச்சி அளித்த விஷயம். அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், இலங்கை என உலகின் பெரும்பாலான நாடுகளிடம் இருந்து இந்தியாவுக்கு ... மேலும் பார்க்க