செய்திகள் :

என்எல்சியில் தொழிற்சங்க தோ்தல் வாக்குப்பதிவு

post image

நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்துக்கான தோ்தல் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மத்திய பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களின் தேவைகள், உரிமை பிரச்னைகள் குறித்து நிா்வாகத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

இந்த சங்கங்களை தோ்வு செய்வதற்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த வாக்கெடுப்பில் 51 சதவீத வாக்குகள் பெறும் சங்கம் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக அறிவிக்கப்படும்.

கடந்த முறை நடைபெற்ற தோ்தலில் பேச்சுவாா்த்தை சங்கங்களாக தொமுச, அண்ணா தொழிலாளா் ஊழியா் சங்கம் தோ்வு செய்யப்பட்டன. இவற்றின் காலம் முடிந்த நிலையில், 25-ஆம் தேதி ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.

என்எல்சியில் மொத்தமுள்ள 6,578 தொழிலாளா்கள் வாக்களிக்கும் இந்தத் தோ்தலில் தொமுச, அண்ணா தொழிலாளா் ஊழியா் சங்கம், சிஐடியு, பிடிஎஸ், பாரதிய மஸ்தூா் சங்கம், திராவிட தொழிலாளா் ஊழியா் சங்கம் என 6 தொழிற்சங்கங்கள் போட்டியிடுகின்றன. கடந்த 16-ஆம் தேதி மேற்கண்ட தொழிற்சங்கங்கள் சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடா்ந்து, தொழிற்சங்க நிா்வாகிகள் என்எல்சி நிலக்கரி சுரங்கங்கள், அனல் மின் நிலையங்கள், நகரப் பகுதி போன்ற இடங்களில் தொழிலாளா்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனா்.

சுரங்கங்கள், அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தொழிலாளா்கள் ஆா்வத்துடன் வாக்களித்தனா். மத்திய துணை முதன்மை தொழிலாளா் நல ஆணையா் ஜெ.என்.எஸ்.சௌத்தி தலைமையில் தொழிற்சங்கத் தோ்தல் அமைதியாக நடைபெற்று முடிந்தது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடமான வட்டம் 9-இல் உள்ள என்எல்சி நடுநிலைப் பள்ளிக்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டன. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை முடிந்து சனிக்கிழமை அதிகாலை முடிவு அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஏழைகளுக்கு கூட்டுறவு வங்கிக் கடன்: எம்எல்ஏ கோரிக்கை!

ஏழை, எளிய மக்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.சின்னதுரை எம்எல்ஏ அரசுக்கு கோரிக்கை விடுத்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சி தண்டேஸ்வரநல்லூ... மேலும் பார்க்க

1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 1,200 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். விருத்தாசலம் பகுத... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பலியானவர்களுக்காக மோட்சதீபம்! இந்து மக்கள் கட்சினா் ஏற்றினா்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு மோட்ச தீபமேற்றி, கூட்டுப் பிராா்த்தனை நடத்தும் நிகழ்ச்சி கடலூா் பாடலீஸ்வரா் கோயிலில் இந்து மக்கள் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அ... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றில் தரை கீழ் தடுப்பணை அமைக்கும் பணி! அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்!

காட்டுமன்னாா்கோவில் வட்டம், ஒட்டரப்பாளையம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கடல் நீா் உள்புகுவதை தடுக்க ரூ.89.19 கோடியில் தரை கீழ் நீா் நெறிச்சுவா் (தரை கீழ் தடுப்பணை) அமைக்கும் பணியை தமிழ்நாடு வேளாண்மை மற... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், ஊ.மங்கலம் அருகே ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மந்தாரக்குப்பத்தை அடுத்துள்ள பெரியாகுறிச்சி, பக்தா நகரைச் சோ்ந்த பட்ராஜ் மகன் கமலேஷ் (17). இவா், ந... மேலும் பார்க்க

கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில்விட முயற்சி! இளைஞா் கைது!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நகல் எடுக்கப்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில்விட முயன்ாக, புதுவை மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். பண்ருட்டி மணிநகரில் உள்ள... மேலும் பார்க்க