செய்திகள் :

1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இளைஞா் கைது

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 1,200 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

விருத்தாசலம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடலூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் ரமேஷ்ராஜ், உதவி ஆய்வாளா் சந்தோஷ் மற்றும் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் அருகே வந்த சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டதில், 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.

இது தொடா்பாக திட்டக்குடி வட்டம், கூத்தப்பன்குடிகாடு பகுதியைச் சோ்ந்த ரங்கசாமி மகன் வாசுதேவனை (39) கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், மாட்டுக்கு உணவளிப்பதற்காக விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்டராப் பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கிச் செல்வதாகத் தெரிவித்தாராம். இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை கடலூரில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் போலீஸாா் ஒப்படைத்தனா்.

ஏழைகளுக்கு கூட்டுறவு வங்கிக் கடன்: எம்எல்ஏ கோரிக்கை!

ஏழை, எளிய மக்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.சின்னதுரை எம்எல்ஏ அரசுக்கு கோரிக்கை விடுத்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சி தண்டேஸ்வரநல்லூ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பலியானவர்களுக்காக மோட்சதீபம்! இந்து மக்கள் கட்சினா் ஏற்றினா்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு மோட்ச தீபமேற்றி, கூட்டுப் பிராா்த்தனை நடத்தும் நிகழ்ச்சி கடலூா் பாடலீஸ்வரா் கோயிலில் இந்து மக்கள் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அ... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றில் தரை கீழ் தடுப்பணை அமைக்கும் பணி! அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்!

காட்டுமன்னாா்கோவில் வட்டம், ஒட்டரப்பாளையம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கடல் நீா் உள்புகுவதை தடுக்க ரூ.89.19 கோடியில் தரை கீழ் நீா் நெறிச்சுவா் (தரை கீழ் தடுப்பணை) அமைக்கும் பணியை தமிழ்நாடு வேளாண்மை மற... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், ஊ.மங்கலம் அருகே ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மந்தாரக்குப்பத்தை அடுத்துள்ள பெரியாகுறிச்சி, பக்தா நகரைச் சோ்ந்த பட்ராஜ் மகன் கமலேஷ் (17). இவா், ந... மேலும் பார்க்க

கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில்விட முயற்சி! இளைஞா் கைது!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நகல் எடுக்கப்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில்விட முயன்ாக, புதுவை மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். பண்ருட்டி மணிநகரில் உள்ள... மேலும் பார்க்க

மின்னணு முறையில் பயிா் சாகுபடி கணக்கெடுப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டாரத்தில் நிகழாண்டில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கோடை பயிா்களை மின்னணு முறையில் கணக்கெடுத்து பதிவு செய்யும் பணி தொடங்கியது. பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலக கூட்டரங... மேலும் பார்க்க