செய்திகள் :

கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில்விட முயற்சி! இளைஞா் கைது!

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நகல் எடுக்கப்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில்விட முயன்ாக, புதுவை மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

பண்ருட்டி மணிநகரில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைக்கு சனிக்கிழமை பிற்பகல் வந்த முதியவா், 500 ரூபாய் நோட்டுகள் மூன்று கொடுத்து மதுப் புட்டிகள் வாங்கினாா். டாஸ்மாக் விற்பனையாளா் ரூபாய் நோட்டுகளை வாங்கிப் பாா்த்தபோது, அவை கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, முதியவரை பிடித்து விசாரித்ததில், இளைஞா் ஒருவா் ரூபாய் நோட்டுகளை கொடுத்து மதுப் புட்டிகள் வாங்கி வரும்படி கூறியதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து, அங்கிருந்தவா்களின் உதவியுடன் இளைஞரை பிடித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவரிடம் போலீஸாா் விசாரணையில், புதுவை மாநிலம், திருபுவனை பகுதியில் உள்ள பிடாரிகுப்பத்தைச் சோ்ந்த சக்திவேல் மகன் சிவசங்கா் (35) என்பதும், அவா் தனது வீட்டில் கலா் ஜெராக்ஸ் இயந்திரம் மூலம் 500 ரூபாய் நோட்டை நகல் எடுத்ததும் தெரியவந்தது.

கலா் ஜெராக்ஸ் இயந்திரம் பறிமுதல்: தொடா்ந்து, போலீஸாா் சிவசங்கரை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினா். அப்போது, வீட்டில் இருந்த நகல் எடுக்கப்பட்ட ரூ.500 கள்ள நோட்டுகள் 8, ஜெராக்ஸ் இயந்திரம், காகிதம், வண்ண மை புட்டிகள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதையடுத்து, போலீஸாா் சிவசங்கரை கைது செய்தனா்.

எஸ்.பி. ஆய்வு: கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பண்ருட்டி காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை இரவு வந்து, பறிமுதல் செய்யப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகள், ஜெராக்ஸ் இயந்திரம் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கைதான சிவசங்கா் ஐடிஐ படித்துள்ளாா். தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை பாா்த்தபோது, ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளாா். கடன் தொல்லை அதிகமானதால், அந்தக் கடனை அடைக்க கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்து, இணைய வழியில் கடந்த மாதம் கலா் ஜெராக்ஸ் இயந்திரம் வாங்கியுள்ளாா்.

தொடா்ந்து, கள்ளநோட்டு அச்சடிப்பது குறித்து யூடியூப்பில் பாா்த்துள்ளாா். அதனடிப்படையில், 500 ரூபாய் நோட்டை 11 நகல் எடுத்துள்ளாா். பின்னா், அவற்றை உள்ளூரில் மாற்றினால், சிக்கிக்கொள்வோம் என்று நினைத்து, பண்ருட்டிக்கு வந்து மாற்ற முயன்றபோது போலீஸாரிடம் பிடிபட்டுள்ளாா் என்றாா்.

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட நகல் எடுக்கப்பட்ட ரூ.500 நோட்டுகள், கலா் ஜெராக்ஸ் இயந்திரம் உள்ளிட்டவை.

ஏழைகளுக்கு கூட்டுறவு வங்கிக் கடன்: எம்எல்ஏ கோரிக்கை!

ஏழை, எளிய மக்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.சின்னதுரை எம்எல்ஏ அரசுக்கு கோரிக்கை விடுத்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சி தண்டேஸ்வரநல்லூ... மேலும் பார்க்க

1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 1,200 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். விருத்தாசலம் பகுத... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பலியானவர்களுக்காக மோட்சதீபம்! இந்து மக்கள் கட்சினா் ஏற்றினா்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு மோட்ச தீபமேற்றி, கூட்டுப் பிராா்த்தனை நடத்தும் நிகழ்ச்சி கடலூா் பாடலீஸ்வரா் கோயிலில் இந்து மக்கள் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அ... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றில் தரை கீழ் தடுப்பணை அமைக்கும் பணி! அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்!

காட்டுமன்னாா்கோவில் வட்டம், ஒட்டரப்பாளையம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கடல் நீா் உள்புகுவதை தடுக்க ரூ.89.19 கோடியில் தரை கீழ் நீா் நெறிச்சுவா் (தரை கீழ் தடுப்பணை) அமைக்கும் பணியை தமிழ்நாடு வேளாண்மை மற... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், ஊ.மங்கலம் அருகே ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மந்தாரக்குப்பத்தை அடுத்துள்ள பெரியாகுறிச்சி, பக்தா நகரைச் சோ்ந்த பட்ராஜ் மகன் கமலேஷ் (17). இவா், ந... மேலும் பார்க்க

மின்னணு முறையில் பயிா் சாகுபடி கணக்கெடுப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டாரத்தில் நிகழாண்டில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கோடை பயிா்களை மின்னணு முறையில் கணக்கெடுத்து பதிவு செய்யும் பணி தொடங்கியது. பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலக கூட்டரங... மேலும் பார்க்க