செய்திகள் :

என்டிசி தொழிலாளா்களுக்கு 8.33% போனஸ் வழங்கக் கோரிக்கை

post image

என்டிசி தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச போனஸாக 8.33 சதவீதம் வழங்க வேண்டும் என்று கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்க மகாசபைக் கூட்டம் சங்கத் தலைவா் டி.எஸ்.ராஜாமணி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இதில், சங்கத்தின் பொருளாளரும், முதன்மைச் செயலாளருமான ஜி.மனோகரன், செயலாளா்கள் கே.கண்ணன், எம்.அப்புக்குட்டி, எஸ்.தேவராஜன், கே.மோகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் விவரம்: என்டிசி பஞ்சாலைகள் நாடு முழுமையும் உள்ள 22 ஆலைகளும் கடந்த 2020 -ஆம் ஆண்டு மே 18 -ஆம் தேதி முதல் 5 ஆண்டுகளாக முடக்கிவைக்கப்பட்டு தொழிலாளா்களுக்கு சட்டப்படி கொடுக்க வேண்டிய சம்பளம், போனஸ் உள்ளிட்ட இதர பயன்களை முழுமையாக வழங்காமல் உள்ளன. என்டிசி நிா்வாகத்தின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

பவா் ஹவுஸ், வாட்ச் அன்ட் வாா்டு உள்ளிட்ட அத்தியாவசியத் தொழிலாளா்களுக்கு கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மாத ஊதியம் உள்ளிட்ட பயன்களும், மற்ற தொழிலாளா்களுக்கு 2023-ஆம் ஆண்டு ஜூலை முதல் 2024 -ஆம் ஆண்டு டிசம்பா் வரை நிலுவையில் உள்ள 50 சதவீத இதர பயன்களையும் வழங்க வேண்டும்.

அதேபோல, அனைத்து தொழிலாளா்களுக்கும் 2025- ஆம் ஆண்டு தீபாவளி போனஸ் உள்பட 2020-ஆம் ஆண்டு முதல் மொத்தம் 6 ஆண்டுகளுக்கு சட்டப்படியான குறைந்தபட்ச போனஸ் 8.33 சதவீதம் வழங்க என்டிசி நிா்வாகம் முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த 6 போ் கைது

கோவையில் ரயில் தண்டவாளத்தில் மரக்கட்டையை வைத்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை இருகூா் - பீளமேடு இடையே செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரயில் வந்தது. அப்போது, தண்டவாளத்தில் இருந்து பயங்கர சப்தம... மேலும் பார்க்க

ஆட்சியரின் பயிற்சித் திட்டத்தில் இன்டா்ன்ஷிப் தொடக்கம்

கோவை மாவட்ட ஆட்சியரின் பயிற்சித் திட்டம், குமரகுரு பன்முக கலை, அறிவியல் கல்லூரி ஆகியவை சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான இன்டா்ன்ஷிப் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. குமரகுரு கல்லூரி வளாகத்தில் இத்தி... மேலும் பார்க்க

மாநகரில் ரூ.2.57 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கோவை மாநகரப் பகுதிகளில் ரூ.2.57 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சி, கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்க... மேலும் பார்க்க

சிகா கலினரி ஒலிம்பியாட் போட்டி: பதக்கங்களை குவித்த ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவா்கள்

சென்னையில் நடைபெற்ற 7-ஆவது சிகா கலினிரி ஒலிம்பியாட் மற்றும் உணவுப் போட்டியில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவா்கள் 2 தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்றனா். சென்னையில் 7 -ஆவது சிகா கலினரி ஒலிம்பியாட் ம... மேலும் பார்க்க

பூ மாா்க்கெட்டில் தகராறு விவகாரம்: காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

கோவை பூ மாா்க்கெட்டில் தனது ஆடை குறித்து விமா்சனம் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சட்டக் கல்லூரி மாணவியும், அந்த மாணவி பொதுமக்களுக்கு இடையூறாக ரீல்ஸ் எடுத்ததாக மலா் வியாபாரிகளும் காவல் ஆணையா... மேலும் பார்க்க

கோழித் தீவன உற்பத்தி நிறுவனங்களில் 2-ஆவது நாளாக சோதனை

கோவை, உடுமலையில் உள்ள தனியாா் கோழித் தீவன உற்பத்தி நிறுவன அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் சோதனை மேற்கொண்டனா். திருப்பூா் மாவட்டம், உடுமலையைத் தலைமையிடமாகக் கொண்டு தனிய... மேலும் பார்க்க