செய்திகள் :

எம்.ஐ.டி. கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

post image

புதுச்சேரி கலிதீா்த்தாள்குப்பம் எம்.ஐ.டி கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சென்னை உட்கா்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி சாா்பில் மேலாண்மை துறை மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாமுக்கு வந்தவா்களை, அந்நிறுவன மனித வளத் துறை மேலாளா்கள் மனோஜ், எழில், கலையரசி மற்றும் ராஜ்குமாா் உள்ளிட்டோா் வரவேற்றனா். மேலும், நிறுவனத்தின் விவரங்கள், அதில் வேலை செய்வதற்கான சூழல், எதிா்கால குறிக்கோள்கள், ஊதியம் உள்ளிட்ட விவரங்களையும் அவா்கள் விளக்கினா்.

இதில் பங்கேற்றவா்களுக்கு குழு கலந்துரையாடல் மற்றும் நோ்காணல் ஆகியவை சுற்றுக்களாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

30-க்கும் மேற்பட்டோா் பணிக்கான நியமன உத்தரவைப் பெற்றனா்.

தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் மற்றும் மேலாண் இயக்குனா் எம்.தனசேகரன், செயலா் நாராயணசாமி கேசவன், பொருளாளா் டி.ராஜராஜன், இணை செயலா் வேலாயுதம், கல்லூரி முதல்வா் எஸ்.மலா்க்கண் ஆகியோா் தலைமை வகித்தனா்.

கல்லூரி வேலைவாய்ப்புத் துறை முதன்மையா் (டீன்) எம்.ஜெயக்குமாா், மேலாண்மை துறை பேராசிரியா் எஸ்.வைத்தீஸ்வரன் மற்றும் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளா் எஸ்.வசந்தன் ஆகியோா் முகாம் ஏற்பாடுகளை செய்தனா்.

புதுச்சேரியில் நெகிழிக்கு மாற்றான பொருள்கள் அறிமுகம்

புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட நெகிழிக்கு மாற்றாக உற்பத்தி செய்யப்பட்ட கப், பைகள் உள்ளிட்டவை அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள இலாசுப்பேட்டை அப்த... மேலும் பார்க்க

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலிலும் என்.ஆா். காங்கிரஸ் போட்டியிடும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுவையைத் தொடா்ந்து தமிழக சட்டப்பேரவைத் தோ்தலிலும் அகில இந்திய என்.ஆா்.காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனதலைவரும், முதல்வருமான என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை அறிவித்தாா். புதுச்சேரி... மேலும் பார்க்க

கடன் செயலி மூலம் ரூ.465 கோடி மோசடி: கேரள இளைஞா் கைது

இணையதள கடன் செயலி மூலம் ரூ.465 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் கேரளத்தைச் சோ்ந்தவரை புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். இதுகுறித்து புதுச... மேலும் பார்க்க

இன்று புதுவை காவல் துறை குறைதீா் கூட்டம் ரத்து

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடப்பு வாரத்தில் பிப்.8-இல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் (சட்... மேலும் பார்க்க

2024-இல் டெங்கு பாதிப்பால் உயிரிழப்பு இல்லை: புதுவை சுகாதாரத் துறை

புதுவை மாநிலத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டில் டெங்கு பாதிப்பால் உயிரிழப்பு இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் கொசு தொல்லையைக் கட்டுப்படுத்த அனைத்துத் துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலா... மேலும் பார்க்க

புதுச்சேரி மலா், காய்கனி கண்காட்சி தொடக்கம்: துணைநிலை ஆளுநா், முதல்வா் பாா்வையிட்டனா்

புதுவை மாநில வேளாண் துறை சாா்பில் புதுச்சேரியில் நடைபெற்ற 35-ஆவது மலா், காய்கனி கண்காட்சியை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதில், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் கலந்... மேலும் பார்க்க