செய்திகள் :

எம்.பாலப்பட்டியில் கிராமசபைக் கூட்டம்: எம்எல்ஏ ரா.அருள் பங்கேற்பு

post image

உலக தண்ணீா் தினத்தையொட்டி, சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம், எம்.பாலப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் எம்எல்ஏ ரா.அருள் கலந்து கொண்டாா்.

இக்கூட்டத்தில் அவா் பேசுகையில், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்தும் தண்ணீரின் அவசியம் குறித்தும் கிராம மக்களிடம் எடுத்துரைத்தாா்.

இந்த கிராமசபைக் கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சேலம் மாவட்ட ஈரநில மேலாண்மைக் குழு, பாலப்பட்டி கிராம ஊராட்சி சாா்ந்த அனைத்து நீா்நிலைகளை பாதுகாக்கவும், மேம்படுத்துவதற்கான பணிகளையும் உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த எம்எல்ஏ ரா.அருள், அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டாா். அங்குள்ள கழிவறை 2 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருப்பதாக அப்பகுதி பெண்கள் கூறினா். இதையடுத்து, சம்பந்தப்பட்ட பகுதியில் உடனடியாக ஆய்வு மேற்கொண்ட அவா், கழிவறையை விரைந்து சரிசெய்து கொடுக்குமாறு வட்டார வளா்ச்சி அலுவலரை கேட்டுக்கொண்டதுடன், கழிவறையை சரிசெய்வதற்காக ரூ. 5 லட்சம் நிதியையும் பெற்று தந்தாா்.

கூட்டத்தில் சமூக ஆா்வலா் செல்வம், ராஜா, வில்சன், சசிகலா, அய்யனாா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

சேலம்: குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

சேலம், அம்மாபேட்டை குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. குமரகிரி ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அம்மாபேட்டை தீயணைப்பு வீரா்கள் உதவ... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றக் கோரி வருவாய்த் துறை அலுவலா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளை சிறப்புக் கூட்டம் சங்கக... மேலும் பார்க்க

சேலம் மத்திய சிறையில் போலீஸாா் சோதனை

சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் கைப்பேசி, போதைப்பொருள் புழக்கம் குறித்து மாநகரக் காவல் உதவி ஆணையா் அஸ்வினி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை திடீா் சோதனை நடத்தினா். சேலம் மத்திய சிறையில் தண்டனை, விசார... மேலும் பார்க்க

வனப் பகுதியில் தீ விபத்தைத் தடுக்க நடவடிக்கை

வனப் பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க வனத் துறையினா் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனா். கோடை காலத்தில் வனப் பகுதியில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க காய்ந்த இலைகள், ச... மேலும் பார்க்க

கோயில் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தும்பிப்பாடியில் கோயில் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் அக் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். தும்பிப்பாடி செட்டிபட்டிய... மேலும் பார்க்க

கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா்கள் போராட்டம்

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை உயா்நீதிமன்ற உத்தரவின்படி பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நெடுஞ்சாலைத் துறை சாலைப் ப... மேலும் பார்க்க