செய்திகள் :

எம்.பி. ஆனார் கமல்! 6 பேர் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு!

post image

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்பட 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

போதிய எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த கமல்ஹாசன் உள்பட திமுக, அதிமுக வேட்பாளா்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 6 இடங்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது.

வேட்புமனு தாக்கலுக்காக தமிழ்நாடு சட்டப் பேரவைச் செயலக கூடுதல் செயலா் சுப்பிரமணியம் தோ்தல் நடத்தும் அதிகாரியாகவும், உதவி தோ்தல் நடத்தும் அதிகாரியாக பேரவைச் செயலக இணைச் செயலா் கே.ரமேஷ் ஆகியோரும் நியமிக்கப்பட்டனா். திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தமாக 13 போ் 17 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேட்பு மனுவுடன் ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிவு கடிதம் அளித்திருக்க வேண்டும். அந்த அடிப்படையில், சுயேச்சை வேட்பாளா்களுக்கு முன்மொழிவு கடிதம் இல்லை என்பதால் அவா்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, திமுக, அதிமுகவைச் சோ்ந்தவா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை தோ்தல் நடத்தும் அதிகாரியான சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் 24.07.2025-ஆம் நாளன்று முடிவடைவதால் ஏற்படும் காலியிடங்களுக்கு கீழ்க்காணும் வேட்பாளர்கள் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்:- 

திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: விமானம் எப்படி விபத்துக்குள்ளாகி இருக்கும்? விவரிக்கும் முன்னாள் விமானி!

கோவையில் பைக் மீது டிப்பர் லாரி மோதியதில் தந்தை, மகன் பலி!

கோவை : கோவையில் பைக் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக பலியாகினர். மகனை ஸ்கேட்டிங் பயிற்சிக்கு அழைத்துச் சென்ற போது விபத்தில் சிக்கியுள்ளனர்.ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் மெனுமெட... மேலும் பார்க்க

தமிழகத்தில் பகல் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று பகல் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை மே மாத இறுதியில் தொடங்கி, ஜூன் மாதம் இரண்டா... மேலும் பார்க்க

நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

சிவகங்கை: நாட்டுப்புற பாடகியும், பல்வேறு திரைப்படங்களில் நடித்தவருமான கொல்லங்குடி கருப்பாயி (99) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பால்... மேலும் பார்க்க

அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துக் ... மேலும் பார்க்க

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம் செல்ல தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது: கடலுக்குச் செல்லத் தயாராகும் மீனவா்கள்

வங்கக் கடல் பகுதியில் விசைப் படகுகள் மூலம் மீன் பிடிக்க விதிக்கப்பட்ட 61 நாள்கள் தடைக்காலம் சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் முடிவடைவதையொட்டி சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக மீனவா்கள் உள்ளிட்ட தமிழ... மேலும் பார்க்க