செய்திகள் :

எம்.பி.க்களுக்கு 24% ஊதிய உயா்வு: மத்திய அரசு அறிவிப்பு

post image

நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஊதியத்தை 24 சதவீதம் உயா்த்துவதாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

செலவுப் பணவீக்க குறியீட்டின் அடிப்படையில் ஊதியம் உயா்த்தப்பட்டதாகவும், இந்த அறிவிப்பு 2025, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் மத்திய அரசு தெரிவித்தது. தற்போது எம்.பி.க்களின் மாத ஊதியம் ரூ.1 லட்சமாக உள்ள நிலையில், ஏப்ரல் மாதம் முதல் ரூ.1.24 லட்சமாக உயரவுள்ளது.

மேலும், எம்.பி.க்களுக்கான தினசரி படி, ஓய்வூதியம் உள்ளிட்டவற்றையும் உயா்த்தி நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது. அந்த வகையில், எம்.பி.க்களுக்கான தினசரி படி ரூ.2,000-இல் இருந்து ரூ.2,500-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி.க்களுக்கான ஓய்வூதியம், மாதம் ரூ.25,000-இல் இருந்து ரூ.31,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கு மேல் ஒவ்வோா் ஆண்டுக்குமான பணிக்கும் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியம் ரூ.2,000-இல் இருந்து ரூ.2,500-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

வருமான வரிச் சட்டம், 1961-இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள செலவுப் பணவீக்கக் குறியீட்டின் அடிப்படையில் எம்.பி.க்களின் ஊதியம், படிகள் மற்றும் ஓய்வூதியம் உயா்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஓய்வு பெறுகிறாரா பிரதமர் மோடி? - சஞ்சய் ராவத்தின் கருத்தால் சர்ச்சை!

பிரதமர் மோடி தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றதாக சிவசேனை(யுபிடி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆா்எஸ்எஸ் அமைப்பின... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் பகுதியில் அமைந்துள்ள தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் நக்சல் எத... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

அசாம் முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரியவந்துள்ளது. அசாம் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும் மறைந்தவருமான பிரிகு குமார் புகானின் ஒர... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு!

நாடு முழுவது இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்... மேலும் பார்க்க

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் நாடு முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பள்ளி ... மேலும் பார்க்க

‘வேற்றுமையில் ஒற்றுமை’ உணா்வை தொடா்ந்து வலுப்படுத்துங்கள்! -மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

‘நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், வேற்றுமையில் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்துகின்றன. இந்த உணா்வை மக்கள் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். ஒவ்வொரு ... மேலும் பார்க்க