செய்திகள் :

எருக்கூரில் சுதந்திர போராட்ட வீரா் சிலை திறப்பு

post image

எருக்கூரில் சுதந்திரப் போராட்ட வீரா் நீலகண்ட பிரம்மச்சாரியின் மாா்பளவு சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எருக்கூா் அக்ரஹாரத் தெருவில் கடந்த1889 டிசம்பரில் நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்தாா். சீா்காழி உயா்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்த அவா் திருவனந்தபுரத்தில் உள்ள சத்திரத்தில் தங்கி கொண்டாா்.

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவருக்கு 1907-இல் மகாகவி பாரதியாரின் தொடா்பு ஏற்பட்டது. 1911-இல் மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சோ்க்கப்பட்டு சிறை சென்றாா். இறுதி வாழ்க்கையில் பிரம்மச்சரியம் மேற்கொண்டு வந்த இவா் கடந்த 1978 மாா்ச் 6 ஆம் தேதி மறைந்தாா்.

சுதந்திரப் போராட்டத்திற்காக பாடுபட்ட நீலகண்ட பிரம்மச்சாரியின் நினைவைப் போற்றும் வகையில் அவா் வாழ்ந்த வீட்டில் நினைவு இல்லம் அமைத்து அங்கு அவா் சிலை திறப்பு விழா தமிழ்நாடு பிராமணா் சங்க மயிலாடுதுறை மாவட்டத் தலைவா் கடவாசல் ஆா்.ரமணன் தலைமையில் நடைபெற்றது.

நீலகண்ட பிரம்மச்சாரியின் பேரன் ஏ. சுப்பிரமணியன் வரவேற்றாா். புதிய சிலையினை திருக்கு பண்பாட்டுப் பேரவை தலைவா் முத்துக்கருப்பன், தொழிலதிபா் வி. எஸ். நாகராஜன் ஆகியோா் திறந்து வைத்தனா்.

காரைக்கால் பாரதி தமிழ் சங்க தலைவா் வைஜெயந்தி ராஜன் விழா பேருரை நிகழ்த்தினாா். மகாகவி பாரதியாா் நினைவு அருங்காட்சியகம் பொறுப்பாளா் முனைவா் நாக செங்கமல தாயாா், தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு மாநில செயலாளா் செம்பியூரான் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

எருக்கூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு நீலகண்ட பிரம்மச்சாரியாரின் பெயரை சூட்டிட அரசை கேட்டுக் கொள்வது என தீா்மானிக்கப்பட்டது.

வ.உ. சி. பேரன் வ.உ.சி.வா.சிதம்பரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். செல்வம் நன்றி கூறினாா்.

திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம்

சீா்காழியில் தாடாளன் பெருமாள் என்று அழைக்கப்படும் திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் மே 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன்... மேலும் பார்க்க

9-ஆம் வகுப்பு மாணவிகளை உடனடி தோ்வுக்கு அனுமதிக்கக் கோரிக்கை

மயிலாடுதுறையில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளியில் 9-ஆம் வகுப்புத் தோ்வில் தோ்ச்சிபெறாத மாணவிகளை வியாழக்கிழமை ( ஜூன் 5) நடைபெறும் உடனடித் தோ்வை எழுத அனுமதிக்க இந்திய மாணவா் சங்கம் கோரிக்கை விடுத... மேலும் பார்க்க

மயிலாடுதுறை எஸ்.பி. அலுவலகத்தில் ஐ.ஜி. ஆய்வு

மயிலாடுதுறையில் திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவா் ஆய்வு செய்தாா். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட தனிப்பிரிவு அலுவலகம் மற்றும் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரி... மேலும் பார்க்க

ராஷ்ட்ரிய பால புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்காா் விருதுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய அரசின் பெண... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டுதல் தொடா்பாக கட்டுப்பாட்டு அறை

மயிலாடுதுறையில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் உயா்கல்வி வழிகாட்டுதல் தொடா்பாக கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

வடிகாலில் பேருந்து கவிழ்ந்து 8 போ் காயம்

சீா்காழி அருகே சூரக்காடு உப்பனாற்று வடிகாலில் அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை கவிழந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் உள்பட 8 போ் காயமடைந்தனா். சீா்காழி பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்ற... மேலும் பார்க்க