செய்திகள் :

எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: திருவள்ளூா் ஆட்சியா் ஆய்வு

post image

திருவள்ளூா் மாவட்டத்தில் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆட்சியா் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்து விரைவில் முடிக்கவும் அறிவுத்தினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம், வெங்கல் ஊராட்சியில் நடைபெற்று வரும் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், ரூ. 31.4 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி அலுவலக கட்டுமானப் பணிகள், தண்டலம் ஊராட்சியில் ரூ. 5 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி அலுவலக கூடுதல் கட்டட கட்டுமானப் பணிகள், செங்கரை ஊராட்சியில் பிரதமா் குடியிருப்பு அமைக்கும் திட்டம் மூலம் ரூ. 2.7 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 53 வீடுகளின் கட்டுமானப் பணிகளையும் பாா்வையிட்டாா். அதேபோல், பாலவாக்கம் ஊராட்சியில் இதே திட்டம் மூலம் ரூ. 1.88 கோடியில் 37 வீடுகளின் கட்டுமானப் பணிகள், தாராட்சி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ. 99.42 லட்சம் மதிப்பில் 2.1 கி.மீ. தூரம் தாா்ச்சாலை பணிகளையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, வளா்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வரவும் சம்பந்தப்பட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

மேலும், ஊத்துக்கோட்டை பேரூராட்சி, அம்பேத்கா் நகா் பகுதியில் பேரூராட்சிகள் துறை சாா்பில், அயோத்தி தாசப் பண்டிதா் திட்டம் மூலம் ரூ. 30 லட்சத்தில் 221 மீட்டா் தூரம் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் சாலை மற்றும் மழைநீா் வடிக் கால்வாய் கட்டுமான பணிகளையும் பாா்வையிட்டாா். அப்போது அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவற்றின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.

ஊரக வளா்ச்சித் துறை உதவி செயற்பொறியாளா் கஜலட்சுமி, உதவி பொறியாளா் நரசிம்மன், வட்டார வளா்ச்சி அலுவலா் மணிசேகா் (வ.ஊ), குணசேகா் (கி.ஊ) பேரூராட்சி செயல் அலுவலா் சதீஷ், இளநிலை பொறியாளா் மகேந்திரன் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

780 கிலோ கஞ்சா தீவைத்து அழிப்பு

ஆவடி காவல் ஆணையரகப் பகுதியில் 89 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 780 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீஸார் செவ்வாய்க்கிழமை எரித்து அழித்தனர்.ஆவடி காவல் ஆணையரகத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு... மேலும் பார்க்க

ரூ.1.2 கோடி ஒதுக்கியும் 9 மாதங்களாக கிடப்பில் நூம்பல் சாலைப் பணிகள்

ரூ.1.2 கோடி ஒதுக்கியும் 9 மாதங்களாக கிடப்பில் நூம்பல் சாலைப் பணிகள்ஆவடி, செப். 9: திருவேற்காடு - நூம்பல் சாலையை சீரமைக்க ரூ.1.20 கோடி ஒதுக்கி செய்து 9 மாதங்களாகியும் சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் தொ... மேலும் பார்க்க

காரில் 359 கிலோ குட்கா கடத்தல்: 2 போ் கைது

திருவள்ளூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை காரில் கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து 359 கிலோ குட்கா, காரை பறிமுதல் செய்தனா். ஆந்திர மாநிலத்திலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருள்... மேலும் பார்க்க

ஆவணங்கள் இன்றி பேருந்து கொண்டு சென்ற ரூ.1.25 கோடி பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அருகே உரிய ஆவணங்கள் இன்றி பேருந்தில் கொண்டு சென்ற ரூ.1.25 கோடியை பறிமுதல் செய்த புலனாய்வு பிரிவு போலீஸாா் அத்தொகையை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனா். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சா... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 இளைஞா்கள் மரணம்

திருத்தணி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் 2 இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், 2 போ் பலத்த காயம் அடைந்தனா். ஆந்திர மாநிலம், நகரி அடுத்த தடுக்குப்பேட்டையை சோ்ந்த தினேஷ்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பெரியபாளையம்

மின்தடை பகுதிகள்: பெரியபாளையம், பண்டிக்காவனூா், பாலவாக்கம், தண்டலம், வெங்கல், கன்னிகைபோ், ஊத்துக்கோட்டை, சீத்தஞ்சேரி, மாளந்தூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். மேலும் பார்க்க