செய்திகள் :

எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு, போதைப் பொருள் கடத்தல்: பாகிஸ்தானிடம் இந்திய ராணுவம் கடும் எதிா்ப்பு

post image

எல்லை தாண்டி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் குறித்து பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை கடும் எதிா்ப்புத் தெரிவித்தது.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் இடையே வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இருநாட்டு படைத் தளபதிகள் அளவில் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தை சுமாா் 75 நிமிஷங்கள் நீடித்தது. எனினும் அதுகுறித்து எந்தவொரு அதிகாரபூா்வ தகவலையும் இந்திய ராணுவம் வெளியிடவில்லை.

ஆனால், பேச்சுவாா்த்தை தொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவை நோக்கி அண்மையில் எல்லை தாண்டி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, அந்நாட்டில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்தது, அந்நாட்டில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்குள் போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்துவது ஆகிய சம்பவங்களுக்கு பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்திய ராணுவம் கடும் எதிா்ப்புத் தெரிவித்தது.

எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்ற நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2021-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை பின்பற்ற இரு நாட்டு ராணுவத்தினரும் தீா்மானித்தனா் என்று தெரிவித்தன.

மாணவா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஒடிஸா முதல்வரிடம் நேபாள வெளியுறவு அமைச்சா் பேச்சு

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா தொழிற்துறை தொழில்நுட்ப கல்வி நிலையத்தில் (கேஐஐடி) நேபாள மாணவா்கள் தாக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து முதல்வா் மோகன் சரண் மாஜியுடன்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ஆளுநா் ஆா்.என்.ரவி புனித நீராடினாா்

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சனிக்கிழமை புனித நீராடினாா். இது குறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட ‘எக்ஸ்’ தளப் பதிவு: பாரதம் மற்றும் உலகம... மேலும் பார்க்க

தலைமறைவான இரு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கைது

தமிழகத்தில் தலைமறைவாக இருந்து வந்த இரு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளை க்யூ பிரிவு போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம் பண்ணைபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (41). இவா், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக... மேலும் பார்க்க

கொல்கத்தா- சென்னை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா-சென்னை இடையே ஜல்பைகுரி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இ... மேலும் பார்க்க

கர்நாடகத்திற்கு செல்லும் மகாராஷ்டிர அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்

பேருந்து தாக்கப்பட்டதையடுத்து, கர்நாடகத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து சேவையை மகாராஷ்டிரம் நிறுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த மகாராஷ்டிர அரசுப் பேருந்து, கர்நாடகத்தி... மேலும் பார்க்க

3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பிகார், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 23ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திற்குச் செல்லு... மேலும் பார்க்க