செய்திகள் :

எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்!

post image

எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் உடல்நலக்குறைவால் இன்று (மார்ச் 16) காலமானார். அவருக்கு வயது 64.

 தமிழ்நாடு அரசின் உ. வே. சா. விருது பெற்ற பெருமைக்குரிய எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுமலையை பூர்வீகமாகக் கொண்டவர். யானை சொப்பனம், திருநெல்வேலி நீர்- நிலம் -மனிதர்கள், வேணுவன மனிதர்கள், பிரேமாவின் புத்தகங்கள் உள்பட மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார்.

வங்கியில் பணிபுரிந்து வந்த நாறும்பூநாதன், விருப்ப ஓய்வு பெற்று அரசுப் பணியை துறந்து, அதன்பின் முழுநேர எழுத்தாளராக தம்மை தமிழுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர். சிறந்த சமூக செயற்பாட்டாளராகவும் விளங்கிய இவர், இளம் படைப்பாளிகளை ஊக்குவித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நாறும்பூநாதன் இன்று (மார்ச் 16) காலை உயிரிழந்தாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அன்னாரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை பிந்து கோஷ் காலமானார்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக வலம் வந்த நடிகை பிந்து கோஷ் இன்று (மார்ச் 16) காலமானார். அவருக்கு வயது 78.1980களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு எனப் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நக... மேலும் பார்க்க

'ரூ' என்பது பெரிதானது ஏன்? முதல்வர் விளக்கம்!

தமிழ்நாடு பட்ஜெட்டில் எல்லாத் திட்டங்களும் எனக்கு நெருக்கமானவைதான் என்றாலும்; சில திட்டங்களை உருவாக்கியது எப்படி என்று பகிர்ந்துகொள்கிறேன்! மேலும் பார்க்க

அண்டை மாநிலத்தில் தேர்வு மையம் - ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம்

ரயில்வே தேர்வு எழுதும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் ரயில்வே தேர்வு வாரியம் விளக்கமளித்துள்ளது.அதில், ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணிக்கான இரண்டாம... மேலும் பார்க்க

தமிழ்நாட்டிலேயே தேர்வர்களுக்கான மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்- இபிஎஸ்

தமிழ்நாட்டிலேயே தேர்வர்களுக்கான மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தெற்கு ரயில்வேயில் உதவி லோகோபைலட் ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் மீண்டும் தொடங்கிய மழை! மகிழ்ச்சியில் மக்கள்!

தமிழகம் மற்றும் புதுவையில் இன்றுமுதல்(மார்ச் 16) அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் பச்சையம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மன்னாதர் சுவாமி சமேத ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று(மார்ச் 16) வெகு விமர்சையாக நடைபெற்றது.கம்பீர சப்த முனீஸ்வரர் திருஉர... மேலும் பார்க்க