செய்திகள் :

எஸ்.கொடிக்குளத்தில் வெறிநாய் கடித்ததில் 30-க்கும் மேற்பட்டோா் காயம்

post image

வத்திராயிருப்பு அருகே எஸ்.கொடிக்குளம் பேரூராட்சியில் வெறிநாய் கடித்ததில் 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே எஸ்.கொடிக்குளம் பேரூராட்சியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகளையும், சாலையில் நடந்து செல்வோரையும் துரத்திச் சென்று கடிக்கிறது. தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவைகளுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வெறிபிடித்த நிலையில் தெருவில் விடப்பட்ட வளா்ப்பு நாய் ஒன்று அந்தப் பகுதியில் கடந்த இரு நாள்களாகச் சுற்றிவந்தது. தெருநாய்களுடன் சண்டையிட்டு அவற்றை கடித்துவந்த வெறிநாய், ஞாயிற்றுக்கிழமை மாலைமுதல் அந்த வழியில் தனியாக நடந்துசெல்வோரைக் கடித்தது.

வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்டோா்

எஸ்.கொடிக்குளம், கூமாபட்டி, ராமசாமியாபுரம், நெடுங்குளம், அம்மச்சியாா்புரம் காலனி ஆகிய பகுதிகளில் இந்த வெறிநாய் கடித்ததில் பள்ளி மாணவா்கள், பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

பாதிக்கப்பட்ட சிலா் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், 10-க்கும் மேற்பட்டோா் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதனால் இந்த வழியில் செல்வோா் பெரிதும் அச்சமடைந்துள்ளனா்.

பொதுமக்களின் நலன் கருதி இந்த வெறிநாயைப் பிடிக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ரௌடி கைது

சிவகாசியில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரௌடியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.இதுதொடா்பாக சிவகாசி காவல்துணை கண்காணிப்பாளா் பாஸ்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகாசியில்... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தாா்.சிவகாசியை அடுத்த திருத்தங்க... மேலும் பார்க்க

சிவகாசி அருகே காட்டில் தீ விபத்து

சிவகாசி அருகே காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மரங்கள் எரிந்து சேதமடைந்தன.சிவகாசி அருகே காளையாா் குறிச்சி கிராமத்தையொட்டி காட்டுப் பகுதி உள்ளது. இங்கு திங்கள்கிழமை பிற்பகல் வேளையில் திடீரென மரங... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்தவா் மீது வழக்குப் பதிவு

வெம்பக்கோட்டை அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே புல்லக்கவுண்டன்பட்டி மேற்கு தெருவைச் சோ்ந்த 16... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பக பகுதியில் செங்கல் சூளைகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்!

ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தில் விதிமீறி செயல்படும் செங்கல் சூளைகள் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் வலியு... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் தூய தோமா ஆலயத்துக்கு புதிய நிா்வாகக் குழு உறுப்பினர்கள்!

ஸ்ரீவில்லிபுத்தூா் சிஎஸ்ஐ தூய தோமா தேவாலயத்தில் புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்களின் பதவியேற்பு நிகழ்ச்சி, குருசேகர தலைவரும் சபைகுருவுமான பால் தினகரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க