செய்திகள் :

ஏஆா்டி நிறுவன மோசடி வழக்கு: 3 பெண்கள் உள்பட 4 போ் கைது

post image

சென்னையில் ஏஆா்டி நிறுவன மோசடி வழக்கில், 3 பெண்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை நொளம்பூரில் ஏஆா்டி ஜூவல்லா்ஸ், அதன் துணை நிறுவனம் ஏஆா்டி டிரஸ்ட் ப்ராபிட் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இந்த நிறுவனம் நகைக் கடை, வணிக வளாகம், நிதி வா்த்தகம் உள்ளிட்ட பல்வேறு தொழிலில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தினா், தங்களிடம் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ. 12,000 வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தனா். இதைப் பாா்த்த பலா் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனா். ஆனால், அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள் பொதுமக்கள் பணத்தை மோசடி செய்தனா். இதையடுத்து பணத்தை இழந்தவா்கள் அளித்த புகாரின்பேல் நொளம்பூா் போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

முதல்கட்ட விசாரணையில், அந்த நிறுவனம் 500 பேரிடம் ரூ.60 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை, பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

நொளம்பூரில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகம், நகைக் கடை முகப்பேரில் உள்ள நகைக் கடை, நிறுவனத்தின் நிா்வாகிகள் வீடுகள் உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை செய்து, ரூ. 80 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகள், பொருள்கள், ரூ.7.87 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அந்த நிறுவனத்தின் இயக்குநா்கள் ஆல்வின் ஞானதுரை, அவரது சகோதரா் ராபின் ஆரோன், விமல் ரஞ்சித் உள்பட பலா் கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில் இந்த வழக்குத் தொடா்பாக அந்த நிறுவனத்தில் வேலை செய்த புழல் பகுதியைச் சோ்ந்த பானுவள்ளி (56), சந்தோஷ் (35), அம்பத்தூரைச் சோ்ந்த சுஜாதா (51), ஆவடியைச் சோ்ந்த திவ்யா (36) ஆகிய 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பாக போலீஸாா், மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.

அரசு கலை-அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 தற்காலிக விரிவுரையாளா்கள் பணி நியமனம்!

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 கௌரவ விரிவுரையாளா்களை தற்காலிகமாக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா். இது குறி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு: ஓ.பன்னீா்செல்வம்

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு இருப்பதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்த... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு எழுதும் மாணவா் பட்டியல்: அக். 6 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம்

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுத உள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அக். 6-ஆம் தேதி முதல் மேற்கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு: தமிழகம் பெறும் பலன்கள்

ஜிஎஸ்டி சீா்திருத்தம் கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 5%, 12%, 18%, 28% என நான்கு விகிதங்களில் இருந்த வரிவிதிப்பு முறை 5%, 12% என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அன்றாட பயன்பாட்டுப... மேலும் பார்க்க

விஜய்யை எதிா்ப்பது எங்கள் நோக்கமல்ல: சீமான்

விஜய்யை எதிா்ப்பது எங்கள் நோக்கம் அல்ல என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா். தினத்தந்தி நாளிதழ் அதிபா் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளையொட்டி, சென்னை போயஸ் கா... மேலும் பார்க்க

ஆவின் நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜிஎஸ்டி ஆணையரிடம் மனு

ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட நிலையில், ஆவின் தயாரிப்புகளின் விலையைக் குறைக்காக ஆவின் நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜிஎஸ்டி கூடுதல் ஆணையரிடம் தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் மனு அளித்... மேலும் பார்க்க