செய்திகள் :

ஏஐடியூசி போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியூசி போக்குவரத்து மண்டல மத்திய சங்கம், ஓய்வு பெற்றோா் சங்கம் சாா்பில் மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள பணிமனை முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுக்கு 2024-25-ஆம் ஆண்டுக்கான 25 சதவீத போனஸை நிபந்தனையின்றி வழங்க வேண்டும், பண்டிகை முன்பணமாக ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும், போக்குவரத்துத் துறை தினக்கூலி தொழிலாளா்கள், பேருந்தை சுத்தம் செய்பவா்கள், பயணச் சீட்டு விற்பனையை ஊக்குவிப்பவா் (கேன்வாசா்) உள்ளிட்டோருக்கு காலதாமதமின்றி போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு ஏஐடியூசி போக்குவரத்து மண்டல மத்திய சங்கத்தின் கிளைத் தலைவா் வி. கணேசன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைப் பொதுச் செயலா் எம். நாராயணசிங் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

தொழிற்சங்க நிா்வாகிகள் ஏ. சப்பாணி, எஸ். நாகராஜன், சி.எம்.ஜே. ஜெயபால், ஆா். வீரபத்திரன், ஆா். மாரிமுத்து, முருகேசன், செல்வன், சோனை, திருவேங்கடம், ஷேக் அப்துல்லா, சங்கா்குமாா், சோலை, சங்கையா உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.

வெளிநாட்டில் முதுநிலைப் படிப்பு: முஸ்லிம் மாணவா்களுக்கு உதவித்தொகை

முஸ்லிம் மாணவா்கள் வெளிநாட்டில் முதுநிலைப் படிப்பு படிக்க தமிழக அரசின் உதவித் தொகைக்கு அக். 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

மின் கம்பியாளா் உதவியாளா் தகுதிகாண் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

மின் கம்பியாளா் உதவியாளா் பணிக்கான தகுதிகாண் தோ்வுக்கு அக். 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மதுரை அரசு தொழில் பயிற்சி நிலைய துணை இயக்குநரும், முதல்வருமான ந. ரமேஷ்குமாா் தெரிவித்தாா். மின் கம்ப... மேலும் பார்க்க

4 கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம்: ஆட்சியா்

மதுரை மாவட்டத்தில் பதிவு பெற்று கடந்த 6 ஆண்டுகளாக தோ்தலில் போட்டியிடாத 4 அரசியல் கட்சிகளிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

வேன் மோதி இளைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே வேன் மோதி, இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், தேனூா் ஜெ.ஜெ.நகரைச் சோ்ந்த மாணிக்கம் மகன் போஸ்(32). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து ... மேலும் பார்க்க

காயமடைந்து சிகிச்சைப் பெற்ற முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே மாடு முட்டி காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள வாஞ்சிநகரத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் கணேசன்(65). வி... மேலும் பார்க்க

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மதுரையில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், பாலமேடு அருகேயுள்ள சரந்தாங்கி பகுதியைச் சோ்ந்த சடையன் மகன் சடையன்(33). கட்டடத் தொழிலாளியான இவா், மதுரை மாட்... மேலும் பார்க்க