செய்திகள் :

ஏக்நாத் ஷிண்டே விவகாரம்: "மன்னிப்பு கேட்கப் போவதில்லை" - ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா பதிலடி!

post image

மகராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா, தனது நிகழ்ச்சி ஒன்றில் ‘தில் தோஹ் பகல் ஹைய்’ என்ற இந்திப் படத்தின் பிரபலமான பாடலைப் பாடி, மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை நேரடியாக குறிப்பிடாமல் துரோகி என மறைமுகமாக பகடி செய்திருந்தார். மேலும் மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் பிளவுகளையும் கேலி செய்திருந்தார். குணாலின் இந்த அரசியல் நையாண்டி பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருகிறது.

இதையடுத்து ஆத்திரமடைந்த சிவசேனா ஆதரவாளர்கள், அவர் காமெடி நிகழ்ச்சி நடத்திய ஸ்டுடியோவை (க்ளப்) அடித்து நொறுக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து அம்மாநில முதல்வர் பட்னாவிஸ் கூட கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மகாராஷ்டிர சட்டசபையிலேயே கூறியிருந்தார்.

இந்த சர்ச்சைகள் குறித்து பேசியிருக்கும் ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா "ஒரு நகைச்சுவையாளரின் பேச்சுக்காக, அவர் நின்று நகைச்சுவை செய்த இடத்தை தாக்குவதென்பது,

குணால் கம்ரா

உங்களுக்கு பட்டர் சிக்கன் பிடிக்காதென தக்காளி கொண்டு செல்லும் லாரியை வழிமறிப்பது போன்றொரு செயல். நான் சொன்னதெல்லாம், அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே குறித்து கூறியவைதான்; ஆகவே நான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை" என்று கூறியிருக்கிறார்.

'அதிமுக, பாஜக, பாமக... நாங்க எல்லாம் கூட்டணிங்க' - ஹின்ட் குடுத்த திண்டுக்கல் சீனிவாசன்

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை 2 மணிநேரம் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஆனால் பாஜ... மேலும் பார்க்க

Edappadi - Amit shah இடையே போடப்பட்ட டீல் - அண்ணாமலை நிலை என்ன?

எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கூட்டணி குறித்து பேசியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சந்திப்பில் பேசப்பட்டது என்ன? எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதா என்பது குற... மேலும் பார்க்க

'இது அரசியல் பிளாக் காமெடியின் உச்சம்' - யோகி ஆதித்யநாத் கருத்துக்கு ஸ்டாலின் காட்டம்

தற்போது, தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை எதிர்ப்பு மற்றும் இந்தி திணிப்பு எதிர்ப்பு பரபரப்பாக போய்கொண்டிருக்கிறது.'ஓட்டு வங்கிக்காக...' -ஆதித்யநாத் இதுக்குறித்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ... மேலும் பார்க்க

'எடப்பாடி பழனிசாமி, வேலுமணிக்கு அடுத்து அண்ணாமலை' - அடுத்தடுத்து டெல்லி விசிட்; காரணம் என்ன?

நேற்று முன்தினம், தமிழ்நாட்டில் பரபரப்பாக சட்டப்பேரவை நடந்துகொண்டிருக்க, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியோ டெல்லிக்கு பயணமானார். 'அதிமுக அலுவலகத்தை காண' என்று எடப்பாடி பழனிசாமி கூறினாலும், அன்று... மேலும் பார்க்க