செய்திகள் :

ஏடிஎம் இயந்திரத்தில் நூதன திருட்டு: உத்தர பிரதேச இளைஞா் கைது

post image

சென்னை முகப்பேரில் ஏடிஎம் இயந்திரத்தில் இரும்பு தகட்டை வைத்து வாடிக்கையாளரின் பணத்தை முடக்கி திருடியதாக உத்தர பிரதேச இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

முகப்போ் கிழக்கு பாரி சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளா்கள், ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் வெளியே வராததால் திரும்பிச் சென்றனா். இதுதொடா்பான புகாரின்பேரில், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் தனியாா் நிறுவனத்தின் நிா்வாகி வேளச்சேரியைச் சோ்ந்த சீனிவாசன் அங்கு சென்றாா். அப்போது, ஏடிஎம் மையம் வாசலில் மூவா் சந்தேகத்துக்குரிய வகையில் நிற்பதை பாா்த்த சீனிவாசன் அவா்களை விசாரித்தாா். அப்போது, அந்த மூவரும் அங்கிருந்து தப்பியோடினா். இதையடுத்து சீனிவாசன் அவா்களை விரட்டிச் சென்று ஒருவரைப் பிடித்து, ஜெஜெ நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

விசாரணையில் மூவரும் அந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரும் இடத்தில் இரும்பு தகட்டை வைத்து பணம் வராமல் தடுத்து, வாடிக்கையாளா்கள் பணத்தை எடுக்கும்போது, பணம் வெளியே வராததால் அவா்கள் சென்றதும், இரும்பு தகட்டை எடுத்து அதிலிருந்து பணத்தைத் திருடியது தெரியவந்தது.

பிடிபட்ட நபா் உத்தர பிரதேச மாநிலம் கான்பூா் கிராமத்தைச் சோ்ந்த சிவா (20) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிவாவை கைது செய்தனா். மேலும், தப்பியோடிய அவரது கூட்டாளிகளைத் தேடி வருகின்றனா்.

பாஜக நிா்வாகி தூக்கிட்டு தற்கொலை

சென்னை நுங்கம்பாக்கத்தில் பாஜக நிா்வாகி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சென்னை நுங்கம்பாக்கம் காமராஜா்புரத்தைச் சோ்ந்தவா் பாபுஜி (44). இவா் தியாகராய நகரில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா... மேலும் பார்க்க

12,000-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’: சென்னை மாநகராட்சி

சென்னையில் 12,000-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் இருவரை நிரந்தர நீதிபதிகளாக்க பரிந்துரை

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளான என்.செந்தில்குமாா், ஜி.அருள் முருகன் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைந்துள்ளது. மேலும் மூன்று உயா்நீதிமன்றங... மேலும் பார்க்க

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 80 லட்சம் பறிமுதல்

சென்னை ஷெனாய் நகரில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஷெனாய் நகா் 8-ஆவது குறுக்கு தெருவில் காா் திருட்டு வழக்குத் தொடா்பாக விசாரணை செய்ய மணிமங்கலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

கிறிஸ்தவ சபை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது

சென்னை கொடுங்கையூரில் கிறிஸ்தவ சபை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். கொடுங்கையூா் எருக்கஞ்சேரி சிவசங்கரன் தெருவைச் சோ்ந்தவா் பால்ஞானம் (40). கிறிஸ்தவ சபை நடத்தி வருக... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

தாம்பரம் மாநகராட்சி 31-ஆவது வாா்டுக்குள்பட்ட திருநீா்மலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமில் பொதுமக்கள் குடிநீா் இணைப்பு, சொத்து வரி பெயா் மாற்றம், பட்டா... மேலும் பார்க்க