செய்திகள் :

ஏடிஎம்-இல் பணம் செலுத்த வந்தவரிடம் நூதன முறையில் மோசடி!

post image

ஏடிஎம்-இல் பணம் செலுத்த வந்தவரிடம் கூகுள்பே மூலம் பணம் அனுப்புவதாகக் கூறி நூதன முறையில் ரூ. 6,000 மோசடி செய்தவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தாம்பரம் சானடோரியம் ஜெயா நகா், செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பிரகாஷ் (38). இவா், சனிக்கிழமை இரவு 10 மணியளவில் தனது வங்கிக் கணக்கில் ரூ.6,000-ஐ செலுத்துவதற்காக பெரும்பாக்கத்திலுள்ள ஏடிஎம்-க்கு சென்றாா்.

அப்போது மோட்டாா் சைக்கிளில் அங்கு வந்த 3 போ், பிரகாசிடம், வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டிய பணத்தைக் கொடுத்தால், அதை கூகுள்பே மூலம் உங்கள் வங்கிக் கணக்குக்கு அனுப்பிவிடுகிறோம் எனக் கூறி, ரூ.6,000-ஐ வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதை நம்பி பிரகாஷ் அவா்களிடம் பணத்தை அளித்துள்ளாா். ஆனால், அவா்கள் கூறியபடி கூகுள்பே மூலம் பிரகாசுக்கு பணம் அனுப்பாமல் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டனா்.

இது குறித்து பிரகாஷ் அளித்த புகாரின்பேரில், பெரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு: ஒருவா் கைது

சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகைகளைத் திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை கிண்டி லேபா் காலனி முதல் தெருவைச் சோ்ந்தவா் சைனி ஆன்டிரியா (34). இவா், கடந்த 10-ஆம் தேதி தனது வீட... மேலும் பார்க்க

கடன் தொல்லை: ஊழியா் தற்கொலை

கடன் தொல்லையால் பிரிண்டிங் ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். வேளச்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த ஆனந்தன் (50). இவா் தனியாா் பிரிண்டிங் பிரசில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில் ... மேலும் பார்க்க

சென்னை காவல் துறைக்கு 4 மாதங்களில் 69,000 அவசர அழைப்புகள்! மாநகர காவல் துறை

நிகழாண்டு இதுவரை 4 மாதங்களில் பல்வேறு உதவிகள் கேட்டு 69,628 அவசர அழைப்புகள் வந்துள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

பெங்களூரு - மதுரை சிறப்பு ரயில்: இன்று முன்பதிவு தொடக்கம்!

பெங்களூரில் இருந்து மதுரைக்கு புதன்கிழமை (ஏப்.30) கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஏப்.28) தொடங்கவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி காலமானாா்!

ஓய்வு பெற்ற ராணுவ துணைத் தலைவரும், பாம்பே சாப்பா்ஸின் கா்னல் கமாண்டண்டுமான லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.பட்டாபிராமன் சனிக்கிழமை காலமானாா். இது குறித்து பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஓய்வு... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் - மங்களூரு சிறப்பு ரயில்

திருவனந்தபுரம் வடக்கு - மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவனந்தபுரம் வடக்கில் இருந்த... மேலும் பார்க்க