செய்திகள் :

ஏப்.6 இல் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார் மோடி

post image

ராமேசுவரம்: பாம்பன கடலில் ரூ.550 கோடி மத்தீப்பீட்டில் தூக்குப் பாலத்துடன் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6 ஆம் தேதி திறந்து வைக்க இருப்பதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.

சிறப்பு ரயில் மூலம் ராமேசுவரம் புதன்கிழமை ராமேசுவரம் வருகை தந்து கட்டுமான பணிகளை ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் 1914 ஆம் ஆண்டு பாம்பன் கடலில் கப்பல் மற்றும் ரயில் செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், 106 ஆண்டுகள் கடந்த நிலையில் பாம்பன் ரயில் பாலத்தின் அடிக்கடி ஏற்பட்ட பழுது காரணமாக தொடர்ந்து ரயில் போக்குவரத்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு ரூ.550 கோடி மதிப்பிட்டில் தூக்குப் பாலத்துடன் புதிய ரயில் பாலம் கட்டுமான பணிகள் தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது.

மேலும், ரூ.90 கோடி மதிப்பிட்டில் ராமேசுவரம் ரயில் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஏப்ரல் 6 ஆம் தேதி தாம்பரம் - ராமேசுவரம் முதல் பயணிகள் ரயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.

திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்களி வைப்பதற்காக 12 புதிய பெட்டிகளைக் கொண்ட ரயில், புதி பாலம் வழியே ராமசுவரத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என கூறினார்.

இந்த ஆய்வின் போது, மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தவா,ரயில்வே பாதுகாப்புப் படை ஐ.ஜி.ஈஸ்வர ராவ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தமிழகத்தில் 160 கி.மீ. அதிவேக ரயில் சேவை: திட்ட அறிக்கைக்கு டெண்டர் வெளியீடு!

ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து டி20-யிலும் சிறப்பாக செயல்பட விரும்பும் ஆப்கன் வீரர்!

டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட விரும்புவதாக ஆப்கானிஸ்தான் அணியின் பிரபல ஆல்ரவுண்டர் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான அஸ்மதுல்லா ஓமர்ஸாய், கடந்... மேலும் பார்க்க

விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் உரிமைத் தொகை! - தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் விடுபட்டோருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியத்திற்குள்பட்ட வெற்றிலைமுருகன்பட்டி, ... மேலும் பார்க்க

7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி,கன்னியாகுமரி,போளூர், செங்கம், சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை ஆகிய 7 ... மேலும் பார்க்க

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி ஓட்டு கேட்க முடியாது! - துரைமுருகன்

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி யாரும் இங்கு வாக்கு சேகரிக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ. 4,034 கோடியை ... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

மியான்மர், தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள தமிழர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுவோர் - 1800 309 3793+91 80690 099... மேலும் பார்க்க

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு! - ஆதி திராவிடர், பழங்குடியினர் நலக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை மேம்படுத்தும் பொருட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல... மேலும் பார்க்க