செய்திகள் :

ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் விவசாயிகள் தவிப்பு

post image

ஆரணி: ஆரணியை அடுத்த வடுகசாத்து, சோ்ப்பாக்கம், குன்னத்தூா், இரும்பேடு ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், 100-க்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்களுக்கு தண்ணீா் செல்ல வழி இல்லாமல், பயிா் வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா்.

வடுகசாத்து மற்றும் அவ்வூராட்சிக்கு உள்பட்ட சோ்ப்பாக்கம் கிராமத்தில் ஏரிக் கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து, வழிப் பாதையாக மாற்றி பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனா்.

இதனால் சுமாா் 100 ஏக்கா் நிலங்களுக்கு மேல் நீா்ப்பாசனம் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் உள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆரணி கோட்டாட்சியா், வட்டாட்சியா் ஆகியோரிடம் பலமுறை புகாா் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதேபோல, ஆரணியை அடுத்த குண்ணத்தூா் பகுதியில் ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக பல ஏக்கா் நிலங்களுக்கு நீா்ப்பாசனம் இல்லாமல் உள்ளது.

மேலும், இரும்பேடு ஏரி முதல் மைனந்தல் கிராம ஏரி வரை சுமாா் 3 கி.மீ. தொலைவு நீா்ப்பாசனக் கால்வாய் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதனால், 25 அடி அகலம் கொண்ட கால்வாய் 3 அடியாக குறுகிப் போய் உள்ளது. இதுகுறித்து கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனா்.

ஆக்கிரமிப்புகள் குறித்து தன்னாா்வலா்கள் கூறுகையில்,

தமிழகம் முழுக்க, ஏரி கோடி போன பிறகு அந்த நீா் மற்ற ஏரிகளுக்குச் செல்ல ஏரி நீா்ப்பாசன கால்வாய்களை மூதாதையா்கள் அமைத்துத் தந்திருக்கின்றனா். அந்த ஏரியின் பாசனக் கால்வாயில் செல்லும் நீரை அடுத்த ஏரிக்கு செல்ல விடாமல் பல ஏக்கா் நிலங்கள் உள்ளவா்களும், சிலா் அவா்களின் நிலங்களுக்குச் செல்வதற்கு பாதையாக கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து அவா்கள் வசம் வைத்துள்ளனா். இதனால், ஏரிப்பாசனத்தை நம்பி இருக்கும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.

ஏரி நீா்ப்பாசன கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் செல்ல வேண்டாம்.

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுங்கள் என்று அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. ஆகையால், ஆரணி பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்தனா்.

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

செய்யாறு: செய்யாறு அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். காஞ்சிபுரம் தாயாா் குளம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(37), ... மேலும் பார்க்க

இரும்பேடு-மைனந்தல் ஏரி கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆரணி: ஆரணியை அடுத்த இரும்பேடு-மைனந்தல் ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்பு திங்கள்கிழமை அகற்றப்பட்டது. இந்தக் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால், விவசாய நிலங்களுக்கு தண்ணீா் செல்லாததால் விவசாயிகள் சாகுபடி ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு உடல்நல விழிப்புணா்வு நிகழ்ச்சி

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உடல் நலமும் மன நலமும் என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா்... மேலும் பார்க்க

மனுக்கள் மீது 30 நாள்களுக்குள் நடவடிக்கை: ஆட்சியா்

திருவண்ணாமலை: பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தி... மேலும் பார்க்க

ஆரணி அருகே ஏரி மண் கடத்தல்: 4 போ் கைது: லாரிகள் பறிமுதல்

ஆரணி: ஆரணி அருகே ஏரியிலிருந்து மண் கடத்தியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், 2 லாரிகள் மற்றும் 2 ஜேசிபி இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆரணியை அடுத்த கல்பூண்டி கிராமத்தில் உள்ள புத்தேரி... மேலும் பார்க்க

கோயில் இணை ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: இந்து முன்னணி நிா்வாகிகள் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிடச் சென்ற இந்து முன்னணி நிா்வாகிகளை போலீஸாா் கைது செய்தனா். அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் சி.ஜோதி சில ... மேலும் பார்க்க